Tuesday, 24 December 2024

பார்த்துப் போங்க சார்!

ஆண்டு கடைசி.  பண்டிகைக் காலம். பள்ளி விடுமுறை.  

புத்தாண்டு பிறக்கிறது.  புதிய ஆண்டில் பதவி உயர்வு. மக்கள் மனதிலே மகிழ்ச்சி.

எல்லாமே இருக்கட்டும். சொந்த ஊருக்குப் போகும் மகிழ்ச்சியில் கவனத்தைச் சிதறடிக்காதீர்கள். சாலையில் போக்குவரத்து நெரிசல். அதுவும் குறிப்பாக மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள். கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று அடம் பிடிக்காதீர்கள்.

வர வர சாலையில் விபத்துகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. சொந்த ஊருக்குப் போகிறபோது இலக்கை அடைய வேண்டியது தான் முக்கிய,ம்.   நிதானம் முக்கியம்.  கவனம்  தவறினால் மரணம் என்பார்கள். அது நமக்கு வேண்டாம். நல்லதே நடக்க வேண்டும். அதுவே நமக்கும் நமது குடும்பத்துக்கும் நல்லது.  ஆசையும், ஆர்வமுமாய் வீடு திரும்புகிறோம் அது நல்லபடியாக நடக்க வேண்டும் என்பது தான் நமது ஆசை.

சாலைகளைப் பயன்படுத்துபவர்கள் பலதரப்பட்டவர்கள். ஒன்று வேகம். இன்னொன்று குடித்துவிட்டு ஓட்டுவது. அது தண்ணியாகவும் இருக்கலாம் அல்லது கஞ்சாவாகவும் இருக்கலாம்.  போதையில் ஓட்டுபவர்களை  யார் என்னதான் செய்ய முடியும்?  பெரும்பாலான விபத்துகளுக்கு இவர்கள் தான் காரணம். அதனால் மது அருந்திவிட்டு வாகனங்களைப் பயன்படுத்தாதீர்கள். அது நடந்துகொண்டு தான் இருக்கிறது. சொன்னாலும் கேட்பதில்லை.

நண்பர்களே!  சாலைகளைப் பயப்படுத்துகிறீர்கள். நிதானம் தான் முக்கியம். சேர வேண்டிய இடத்தில் சேர வேண்டியது தான் முக்கியம்.

கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துகள்!

No comments:

Post a Comment