Friday, 20 December 2024

பகுத்தறிவு கருத்தரங்கு தேவையா?

                                       பினாங்கு இந்து அமைப்பினர்

 வருகிற சனிக்கிழமை  (21.12.24) நடைபெறுகின்ற பன்னாட்டுப் பகுத்தறிவு கருத்தரங்கம்  .தேவையா என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். 

தமிழ் நாட்டில் தான் என்னன்னவோ  சொல்லி தமிழர்களை வாழ விடாமல்  செய்கிறீர்கள் என்றால் இங்கேயும் அதைச் செய்ய வேண்டுமா என்று யோசித்துப் பாருங்கள்.  இந்தப் பகுத்தறிவு சிங்கங்களால்  எதுவும் ஆகப்போவதில்லை.

முதலில் தமிழ் நாட்டில் சாதிவெறியை ஒழித்து விட்டீர்களா?  சாதியை வளர்த்தவர்களே நீங்கள் தானே.  உங்களால் எந்த சாதியை ஒழிக்க முடிந்தது?  சாதியை வளர்த்துக் கொண்டே  சாதியை ஒழித்து விட்டோம் என்று நீங்களே சொல்லிக்  கொள்கிறீர்கள்.  சாதியை ஒழித்துவிட்டோம் என்று சொல்லி  தமிழ் நாட்டை,  தமிழன் கையிலிருந்து அபகரித்துக் கொண்டீர்கள்.  இன்னும் தமிழன் தலையில் மிளகாய் அரைக்க வேண்டுமா?

தம்பிகளா! உங்கள் பகுத்தறிவைக்   காட்டுவதற்கு தமிழன் தான் அகப்பட்டானா?   தமிழனை இளிச்சவாயன் என்றே முடிவுக்கட்டி விட்டீர்களா? ஏன் தெலுங்கர், மலயாளி - இவர்கள் எல்லாம்  எங்கே போனார்கள்?  அங்கே போய் உங்கள் பகுத்தறிவைக் காட்ட வேண்டியது தான?   ஏன் நாயுடு, ரெட்டி,  நாயர், மேனன் - இவர்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகளாக  மாறிவிட்டார்களா?

இந்தப் பகுத்தறிவு கருத்தரங்கத்திற்கு  - தமிழர்களைப் பகுத்தறிவாளர்களாக மாற்ற  - எத்தனை  நாயுடுகள், ரெட்டிகள், நாயர்கள், மேனன்கள்   தமிழ் இனத்திற்குத்    தலைமை தாங்க, உலக நாடுகளிலிருந்து  வரப்போகிறார்கள்?  அதையும் சொல்லிவிடுங்கள்.

உங்களின் பகுத்தறிவால் தமிழ் நாட்டில் தமிழனுக்குத்தான் தலை குனிவு. இங்கே என்ன தான் உங்களுக்கு  வேண்டும்?  பொருளியல் முன்னேற்றம் தான்  எங்களுக்குத் தேவை.  அதனைத் தமிழ் நாட்டில் உங்களால் கொடுக்க முடியவில்லை.  இங்கே முடியுமா?


No comments:

Post a Comment