Saturday, 21 December 2024

Tik Tok நடவடிக்கை தேவையே!!


மேலவையில் செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் நல்ல, மிகத்தேவையான கருத்தை  வலியுறுத்தியிருக்கிறார்.

இன்று டிக் டோக்கினால் பள்ளிக் குழந்தைகள் சீரழிகிறார்கள்  என்பது உண்மையே. அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளில் இறங்காவிட்டால்  நாடு நாசமாகிவிடும்.  பிள்ளைகளின் எதிர்காலம்  பெரும் பாதிப்புக்குள்ளாகும்.

டிக் டோக் நிறுவனத்தின் நலன் முக்கியம் அல்ல.  நாட்டின் எதிர்காலம் தான் இன்றைய தலைமுறை முழந்தைகள்.  அவர்கள் தான் வருங்காலத் தலைவர்கள்.   ஏற்கனவே  நமது கல்விமுறை கொள்ளையடிக்கும் கும்பலைத்தான்    உருவாக்கியிருக்கிறது!  அது போதாதென்று இப்போது டிக் டோக்!  இது மூளையையே மழுங்கடிக்கக் கூடியது. மூளையில்லாத் தலைவர்களைத்தான் உருவாக்கும்! அறிவுப் பஞ்சத்தைத்தான்  ஏற்படுத்தும்.  நாட்டிற்குப் பயன் தராதவை, மக்களுக்குப் பயன் தராதவை  என்றால்  அது நமக்கு வேண்டாம்.

இந்த நேரத்தில் ஒன்றை நாம் சொல்லித்தான் ஆக வேண்டும்.  நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வரமுடியவில்லை  என்றால் மிகக் கடுமையான நடவடிக்கை தேவையே.  அதனை நாம் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.  பாதிப்பு ஏற்படுகிற நிலைமை என்றால்  பதினாறு வயதிற்கு உட்பட்டவர்கள்  பயன்படுத்தாதபடி  தடை செய்ய வேண்டும்.   வேறு வழியில்லை.

டிக் டோக் சரியாகப் பயன்படுத்தினால்  அதனால் நமக்கு நல்ல பல பயன்கள் உண்டு.  ஆனால் பெரியவர்களோ, சிறியவர்களோ  இப்போது எல்லாருமே தவறாகப் பயன்படுத்துவதைத் தான் நாம் காண்கிறோம்.  அதனை வைத்து பலர் பல தொழில்களை வெற்றிகரமாகச்  செய்து கொண்டிருக்கின்றனர்.  ஒரு கூட்டம் அவர்களை வீழ்த்துவதற்குப் படாதபாடு படுகின்றனர்!  எல்லாவற்றிலுமே போட்டி பொறாமை.

எப்படியோ  பள்ளிக்குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம் என்பதால்  அரசாங்கம் இந்த டிக் டோக் விஷயத்தில்  கவனமாக இருக்க வேண்டும் என்பதே நமது  வேண்டுகோள்.


No comments:

Post a Comment