Friday, 13 December 2024

முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை!

ஆசிரியர் பற்றாக்குறை என்றால் நாம் யாரைக் குற்றம் சொல்வோம்? பொது மக்களாகிய நம் கண்களுக்குப் பளிச்சென தெரிபவர்கள் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தான்.  காரணம் அவர்கள் தான் அதன் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

குறிப்பிட்ட சில பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை என்றால் ஏற்கனவே அவர்கள் தயார் நிலையில் இருந்திருக்க வேண்டும்.  அதெப்படி அவர்களுக்குத் தெரியாமல் போகும்?  அதற்குத்தானே கல்வி அமைச்சு  என்று ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது?

இன்று பற்றாக்குறை என்றால் அன்று அவர்கள் வேலையை அவர்கள் ஒழுங்காகச் செய்யவில்லை என்று பொருள். அதுமட்டும் அல்ல. அவர்கள் வேலை என்னவேன்றே தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது.

பொதுவாகவே அரசு ஊழியர்களுக்கு அவர்கள் வேலை  என்ன என்பதே அவர்களுக்குத் தெரியாமல் இருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.  அரசாங்கத்தில் ஏதாவது வேலை ஆகவேண்டுமானால்  அது உடனடியாக நடக்கக்கூடிய வாய்ப்பே இல்லை.  இது சரியில்லை  அது சரியில்லை என்று இழுத்தடிக்கும் போக்கு அதிகளவில் உள்ளது.  அதற்குக் காரணம் அவர்களுக்கே அந்த வேலை தெரியாத போது அதனை அவர்கள் மக்கள் பக்கம்  திருப்பி விடுகின்றனர்!

ஆனால் கல்வி அமைச்சு நிலைமை அப்படியல்ல.   மக்களுடனான தொடர்பு அவர்களுக்குக்  குறைவு.   கல்வி அமைச்சர் இது போன்ற செய்திகளை - ஆசிரியர் பாற்றாகுறை - முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை - என்று சொல்லுவதே  மிகக் கேவலமான செயல்.  அப்படியென்றால் கல்வி அமைச்சுக்கு ஏன்  அத்தனை பணியாட்கள் என்று தான் கேட்க வேண்டியுள்ளது.

ஒன்று மட்டும் உறுதி.  அரசாங்கம் தனது பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையே சரியில்லை என்பதில் கொஞ்சமேனும் ஐயமில்லை.  அதனால் தான் இத்தனை குளறுபடிகள்!  அரைகுறை படிப்பு எல்லாவகையிலும் மக்களைப் பாதிக்கிறது. அரைகுறை படிப்பு அரசியல்வாதிகளைத் தான் உருவாக்க முடியும். திறமையாளர்களை உருவாக்க முடியாது.  குறிப்பாக  தகுதிப்பெற்ற ஆசிரியர்களை உருவாக்க முடியாது.

என்ன செய்ய? காலத்தின் கோலம் என்பதைத்தவிர சொல்ல வேறொன்றுமில்லை!

 

No comments:

Post a Comment