தமிழ் திரையுலகில் முதன் முதலாக இலட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் யார் என்கிற பேச்சு அவ்வப்போது நம்மிடையே எழுவது வழக்கம். அவர் நடிகர் அல்ல நடிகை கே.பி.சுந்தராம்பாள். அவர் நடித்த "பக்த நந்தனார்" என்கிற படத்துக்கு ஒரு இலட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாராம். ஒரு சுவாராஸ்யமான செய்தி. அப்போதெல்லாம் திரைப்படங்கள் எடுக்க கையில் 30,000 ரூபாய் இருந்தால் போதுமாம். அப்படி ஒரு காலகட்டத்தில் தான் அவர் ஒரு இலட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார். படமும் செம ஓட்டமாம்..
அடுத்து நகைச்சுவை நடிகர் ஜே.பி.சந்திரபாபு . தனது நகைச்சுவை நடிப்பால் தமிழ் திரையுலைகை ஒரு கலக்குக் கலக்கியவர். அவர் நடித்த "சகோதரி" என்கிற திரைப்படத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் வாங்கியவர். அதற்கான காரணம் படம் ஆரம்பத்தில் தயாரான போது தயாரிப்பாளருக்குப் படம் திருப்தி அளிக்கவில்லையாம். அதனால் அப்போது நகைச்சுவையில் பிரபலமாக இருந்த சந்திரபாபுவை அணுகி அவருக்கென்று தனியாக நகைச்சுவை காட்சிகளை அமைத்து படத்தை வெற்றிபெறச் செய்தாராம் தயாரிப்பாளர். அந்த நகைச்சுவைக் காட்சிகளை அமைத்தவரே சந்திரபாபு தானாம்! அதற்கான சம்பளம் அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாம்.
குறிப்பு: இந்த விவரங்களைச் சொன்னவர் சித்ரா லட்சுமணன். இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் இப்படி பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். நீண்டகாலமாக தமிழ் திரையுலகில் இருப்பவர். சினிமா உலகைப்பற்றி முற்றும் அறிந்தவர். எண்பது ஆண்டுகள் தமிழ் சினிமா என்பது பற்றி புத்தகம் போட்டவர். ஆக, அவர் கொடுத்த ஆதாரங்களின் படி இந்தச் செய்திகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
No comments:
Post a Comment