Sunday, 19 January 2025

நிரந்தர தீர்வு தேவை!

தைப்புச திருவழாவிற்குப் பெரும்பாலான மாநிலங்களில் விடுமுறை என்பது  நமக்குத் தெரியும்

ஆனால் கெடா மாநிலம் அதற்கு விதிவிலக்கு. அந்த மாநிலம் மட்டும் ஒரு  நிரந்தர தீர்வைக் கொடுக்கவில்லை.  ஒவ்வொரு ஆண்டும் கேட்டுத்தான் பெற வேண்டியுள்ளது.  ஏதோ ஒரு வகையில் அன்று ம.இ. கா. செய்த தவறு. இன்றுவரை  அதற்கு ஒரு நிரந்தர தீர்வைக்காண முடியவில்லை.

கெடா மாநிலம் பாஸ் கட்சியின் ஆட்சியில் உள்ள மாநிலம்.  பாஸ் கட்சியைப் பற்றி நமக்குத் தெரியும். அது எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்.  ஆனால் இன்று பாஸ் கட்சியில்  இந்தியர் பிரிவு என்று ஒன்று இருப்பதாகச் சொல்லப்படுகிறது.  அவர்கள் சார்பில் ஓரு செனட்டர் கூட இருந்ததார். இப்போது தெரியவில்லை. ஆனால் இந்தியர் பிரிவு இருப்பது நமக்குத் தெரியும். 

ஒரு காலகட்டத்தில் மாநிலம் தேசிய முன்னணியின் கீழ் தான் இருந்தது. அப்போதும் அதற்கு விடிவு பிறக்கவில்லை.   இப்போது பாஸ் கட்சியினர். நிச்சயமாக அவர்கள் ம.இ.கா.வின் குரலுக்குச் செவிசாய்க்கப் போவதில்லை.  அதனால் நாம் சொல்ல வருவதெல்லாம் பாஸ் கட்சியின் இந்தியப் பிரிவினர்  இதனை ஏன் கையில் எடுத்துப் பேசக்கூடாது என்பது தான்.  அவர்கள் குரல் ஒருவேளை  எடுபட வாய்ப்புண்டு.  அவர்களுக்கும் நேரம் வரும். வளைந்து கொடுத்துத்தான் ஆக வேண்டும்.  

அதனால் நாம் சொல்ல வருவதெல்லாம்  பாஸ் கட்சியின் இந்தியப் பிரிவினர்  இந்தப் பிரச்சனையை மேலிடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்  என்பது தான். அந்தப் புண்ணியத்தை நீங்கள் தேடிக் கொள்ளுங்களேன்.  நீங்களும் இந்திய சமுதாயத்தின்  ஓர் அங்கம் தானே? அதனை ஏன் ம.இ.கா. தான் செய்ய வேண்டும்  என்று நீங்களும் நினைக்கிறீர்கள்?  யார் செய்தாலும்  அது இந்திய சமுதாயத்திற்குத் தானே?

பாஸ் கட்சியின் இந்தியர் பிரிவினருக்காக  இந்த வேண்டுகோள். பார்ப்போம!


No comments:

Post a Comment