Saturday, 11 January 2025

மதுபானத்திற்கு இடமில்லை!


 சமீபத்தில் கல்வி அமைச்சு  சீனப்பள்ளிகளுக்கு ஒரு தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

சீனப்பள்ளிகள், பள்ளிகளில் உள்ள மண்டபங்களை வாடகைக்கு விடும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன.  அவை பெரும்பாலும்  திருமண விருந்துகளோ அல்லது வேறேனும்  விருந்து நிகழ்ச்சிகளுக்கோ  பொது மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.

கல்வி அமைச்சு அது போன்ற விருந்துகளுக்குத் தடையைப் போட்டிருக்கிறது. அவர்கள் சொல்லுகின்ற காரணம் அந்த விருந்துகளில்  மதுபானங்கள் பரிமாறப்படுகின்றது  என்கிற  காரணம் தான். விருந்து நிகழ்ச்சிகள் என்றாலே மதுபானங்கள் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. நம்மிடம் ஒரு கேள்வி உண்டு. பள்ளி நேரத்தில் எந்தவொரும் விருந்தும் நடைபெறுவதில்லை.  பெரும்பாலும் இரவு நேர நிகழ்ச்சிகள் தான். அதிலும் குறிப்பாக சனி, ஞாயிறு இரவுகளில் தான். விதிவிலக்குகளும் உண்டு.  பள்ளிப்பிள்ளைகள் எந்த வகையிலும்  சம்பந்தப்படவில்லை. இந்த நிலையில் ஏன் தடை செய்ய வேண்டும்?

பள்ளிகள் தங்களது மண்டபங்களை வாடகைக்கு விடுவதே  பொருளாதார ரீதியில் தான்.  பண நெருக்கடி  பள்ளிகளுக்கு உண்டு. அவர்கள் கேட்கின்ற தொகையைக் கலவி அமைச்சால் கொடுக்க இயலாது. அல்லது தாமதமாகும்.  தேவைப்படும் போதெல்லாம் பள்ளிகள் கையேந்த முடியாது.  அதனால் அவர்கள் பல்வேறு வழிகளில் நிதி திரட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். தங்களது பள்ளி மண்டபம் என்னும் போது  அது அவர்களுக்கு வசதியாகவே இருக்கும். 

கல்வி அமைச்சு தேசிய பள்ளிகளுக்கு ஒதுக்கும்    தொகை மற்ற தாய் மொழி பள்ளிகளுக்கு  ஒதுக்குவதில்லை.  பல்வேறு காரணங்கள்.  பள்ளிகளையும்  இது போன்று விருந்து நிகழ்ச்சிகளை நடத்த விடாமல் செய்தால் அவர்கள் எப்படி செலவுகளைச் சமாளிக்க முடியும்? நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கல்வி அமைச்சு விரைவில் நல்லதொரு அறிவிப்பை  வெளியிடும் என நம்புகிறோம்.

No comments:

Post a Comment