Friday, 10 January 2025

ஒரு நடிகனின் முதல் வெற்றி!

 

                                                                 தல, தல தான்!
தமிழ் சினிமா உலகம் எத்தனையோ நடிகர்களைக் கண்டிருக்கிறது.  அவர்களில் ஒருவர் கூட  கார் பந்தயத்தின் பக்கம் தலைகூட வைத்துப் படுத்ததில்லை!

அது எல்லாராலும் முடியாத காரியம்.  அதற்கு முக்கிய காரணம் பயம் தான். பயம் மட்டுமே தான்.   அதனால் தான் அந்தப் பக்கம் யாரும் போவதில்லை. ஒரு சிலரே அந்தப் பந்தயத்தில் பங்கு பெறுகிறார்கள்.

அப்படிப்பட்ட பந்தயத்தில் நடிகர் அஜித் குமார்  பங்குப்பெற்று பரிசும் பெற்றிருக்கிறார் என்றால்  நிச்சயமாக அது ஒரு மாபெரும் வெற்றியாகத்தான்  நாம் கொண்டாட வேண்டியுள்ளது. துபாய் நகரில் நடைப்பெற்ற 24 மணி நேர ஓட்ட கார் பந்தயத்தில், போர்ஷே 992 பிரிவில்,   அவருடைய அணியினர் மூன்றாவது பரிசைப் பெற்றிருக்கின்றனர்.

பொதுவாகவே அஜித்  மோட்டார் சைக்கிள், கார் பந்தயங்களில்  இளமைக்கால முதலே  ஈடுபாடு உள்ளவர்.  சில பந்தயங்களில் கலந்து கொண்டாலும்  சொல்லும்படியாக எந்த ஒரு வெற்றியும் அமையவில்லை.  ஆனாலும் வெற்றியோ  தோல்வியோ  தனது பயிற்சிகளை மட்டும் அவர் விடவில்லை.    அது எப்போதும் போல தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. அவருடைய ஆர்வம் சிறிதளவும் குறையவில்லை. 

பல ஆண்டுகளாக அவர் தொடர்ந்த அந்தப் பயிற்சி  இப்போது பலனைக் கொடுத்திருக்கிறது.  அதைத்தான் சொல்லுவார்கள் நீங்கள் எதில் ஆர்வம் கொண்டிருக்கிறீர்களோ அதனைத் தொடர்ந்து செய்யுங்கள். ஒரு நாள் வெற்றி உங்களைத் தேடி வரும் என்பதாக,  அந்தத் தொடர்பயிற்சி தான் இன்று அஜித்தின்  53-வது வயதில் பரிசு பெற வைத்திருக்கிறது.  நமது பயிற்சிகள் என்றுமே நம்மைக் கைவிட்டதில்லை; கை விடுவதுமில்லை.

இந்திய சினிமா உலகம் இது போன்ற வீரனை கண்டிருக்கிறதோ, இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால் இப்போது ஒரு அஜித் குமாரைக் கண்டிருப்பது நமக்குப் பெருமையே! அது தமிழ் சினிமா உலகம்  கண்டிருக்கிறது.

No comments:

Post a Comment