Thursday, 9 January 2025

உங்கள் பொழைப்ப பாருங்கப்பா!


நடிகர் அஜீத் குமார் நடிகர்களிலேயே  வித்தியாசமானவர். தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர்.   அவருடைய இரசிகர்களுக்கும் அவர் அப்படித்தான் சொல்லி வருகிறார். 

"உங்கள் பிழப்பை பாருங்கள்"  என்பது தான் அவருடைய இரசிகர்களுக்கு அவர் கொடுக்கும்  செய்தி.  மற்ற எந்த நடிகனுக்கும் இப்படி ஒரு மனசு வராது. பெரும்பாலான நடிகர்கள் இரசிகன் என்றால் அவன் தனது காலடியிலேயே கிடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். தனக்கு இரசிகர் மன்றம் வைக்க வேண்டும், தனது படங்களுக்கு விளம்பரம் கொடுக்க வேண்டும், தனக்காக உயிரைக் கொடுத்தாவது  போராட வேண்டும், தனது படங்கள் தியேட்டர்களில் ஒடுவதற்கு தனது இரசிகன்  தினசரி தியேட்டர்களில் தனது படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற 'உயரிய' கொள்கைக் கொண்டவர்களாக இருப்பவர்கள்! தனது வருமானத்தைப் பெருக்குவது தான் இரசிகனின் வேலை    முடிந்தால் தமிழ் நாட்டின் அடுத்த முதலைமைச்சராக்க வேண்டியது தனது  இரசிகனின் கடமை என்கிற  நோக்கம் கொண்டவர்களாக  இருப்பார்கள்

ஆனால் நடிகர் அஜித் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். தனது இரசிகன் அவனது வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்று மனதார நினைப்பவர். அதனால் தான் அவர் அடிக்கடி "உனது வேலையைப்பார், உனது குடும்பத்தைப்பார், உனது முன்னேற்றத்தைக்கவனி" என்று  இரசிகனுக்கு  அறிவுரைக் கூறுபவராக இருக்கிறார்.

இவருக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால்   நம் மத்தியில்  இப்படியெல்லாம் நினைப்பவர்கள்  குறைவு.  போட்டி, பொறாமை நிறைந்த உலகில் இப்படியும் மனிதர்கள் உண்டு என்று நினைக்கும் போது அவர்களைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

மீண்டும் அவர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால்  "உங்க  பொழப்ப பாருங்கப்பா!"

No comments:

Post a Comment