மலேசிய அரசியலில் என்னன்ன மாற்றங்கள் வரும் என்பதை நம்மால் யூகிக்க முடியவில்லை.
இதற்கெல்லாம் ஒரே காரணம் தான். சென்ற தேர்தலில் பிரதமர் அன்வார் இப்ராகிம் இந்தியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் பயங்கர பல்டி அடித்தது தான்! அவர் செய்த தில்லுமல்லுகளை நம்மால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை என்பது உண்மை தான். கல்வி, பொருளாதாரம் என்று வரும்போது அவர் நம்மை புறந்தள்ளி விட்டார். சுருக்கமாகச் சொன்னால் இந்தியர்களின் முன்னேற்றத்தை அவர் விரும்பவில்லை. பழங்குடியினரோடு நம்மையும் சேர்ப்பதில் தான் அவர் மும்முரம் காட்டுகிறார்.
ஆனால் அதற்காக பெரிகாத்தான் கூட்டணியில் கைக்கோர்ப்பது சரியான முடிவுதானா? முகைதீன் இந்தியர்கலுக்குச் சார்பாக இருக்கப்போவதில்லை என்பது தெரியும். பாஸ் கட்சியோ மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி அவர்கள் ஏறக்குறைய ஆப்கானிஸ்தான் சார்பு உள்ளவர்கள். இதை வைத்துப் பார்க்கும் போது அவர்களோடு எப்படிக் கூட்டணி வைக்க முடியும்?
உரிமை கட்சிக்கு நாம் சொல்ல வருவதெல்லாம் இன்னும் கொஞ்சம் நாள் பேச்சுவார்த்தைகளைத் தள்ளி வையுங்கள் என்பது தான். பிரதமர் அன்வாருக்கு இன்னும் கொஞ்ச நேரம் கொடுங்கள். அவரும் மாற வேண்டிய நிலை வரலாம். இப்படியே அவர் போய்க் கொண்டிருப்பார் என்று சொல்வதற்கில்லை.
நம்முடைய எண்ணமெல்லாம் யார் பதவிக்கு வந்தாலும் இப்போது அன்வார் என்ன செய்கிறாரோ அதைத்தான் அவர்களும் செய்யப்போகிறார்கள் என்பது தான். நம்முடைய அரசியல்வாதிகளிடம் இனப்பற்றோ, மொழிபற்றோ என்பது இல்லை. அவர்கள் சமுகத்தைத் தான் பார்க்கிறார்கள். தமிழர்களை அலட்சியம் செய்கிறார்கள்.
அன்வார் சரியான ஆள் இல்லைதான் ஆனால் அந்தப் பக்கமும அப்படி ஒன்றும் சரியான ஆள் இல்லையே!
No comments:
Post a Comment