இப்படி பிளாஸ்டிக் பைகளில் குப்பைகளை ஏற்றினால் அதனால் விளையும் விபரீதங்களுக்கு யார் பொறுப்புகளை ஏற்பது? யாருடைய பொறுப்பு என்பது கூட நமக்குப் புரியவில்லை.
இன்றைய நிலையில் நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன.. அதுவும் லாரி விபத்துகள் நிறையவே ஏற்படுகின்றன. என்னன்னவோ குறைபாடுகள் சொல்லப்படுகின்றன. நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புஷ்பகோம் நிறுவனத்தில் ஊழல் என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பொதுமக்களா பொறுப்பு? பொறுப்பில உள்ளவர்கள் பொறப்பற்று நடந்து கொண்டால் ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்கிற கேள்வி எழுகிறது.
இதோ மேலே படத்தில் உள்ள லாரிக்கு எண்பட்டை இல்லை. அப்படியென்றால் இவர்கள் பொது சாலைகளைப் பயன்படுத்த முடியாது. ஆனால் லாரியால் சாலைகளைப் பாயன்படுத்த முடிகிறது. அது எப்படி? நாம் கேள்வி கேட்பதால் எந்தப் பதிலும் கிடைக்கப் போவதில்லை. நாம் என்னதான் கேள்விகள் கேட்டாலும் நடப்பது நடந்து கொண்டு தான் இருக்கும்.
இது போன்ற லாரிகள் அதுவும் போக்குவரத்துக்குப் பயமுறுத்தலாக இருக்கும் லாரிகள் சாலைகளைப் பயன்படுத்துகின்றன. மக்கள் நடமாடுகின்றனர். மற்ற போக்குவரத்துகளும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இப்படி மிகவும்அபாயகரமான முறையில் லாரிகள் ஓடும்போது மற்ற வாகனங்கள் ஓட்டுநர்களும் உயிரைக் கையில்பிடித்துக் கொண்டு தான் சாலைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
அதிகாரிகளின் அலட்சியத்தினால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிகாரிகளுக்கு எப்போது நல்லகாலம் பிறக்குமோ அப்போது தான் பொதுமக்களுக்கும் நல்ல காலம் பிறக்கும்! அதுவரை மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியே!
No comments:
Post a Comment