லாரி ஓட்டுனர் என்பது சமூக உருமாற்றமா என்று கேட்டால் 'பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளலாம்' என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
இப்போதும் கூட எஸ்.பி.எம். தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் இந்த வேலையில் சேர்வதற்குத் தான் முனைப்புக் காட்டுகின்றனர். ஆனால் வேறு வகையான தொழிற்கல்வி பயில வாய்ப்புகள் நிறையவே காத்துக் கிடக்கின்றன. அரசாங்கம் பல தொழிற்கல்வி நிறுவனங்களை அமைத்து நமது இளைஞர்களை வரவேற்றுக் கொண்டிருக்கிறது. தொழிற்கல்வியில் மாணவர்கள் இன்னும் அதிக அளவில் பங்குப் பெறுவதே அவர்களின் எதிர்காலத்திற்குச் சிறப்பாக அமையும்.
லாரி ஓட்டுவது என்பதை நாம் தாழ்வாக நினைக்கவில்லை. எதிர்காலத்தில் நமது இளைஞர்கள் அதிகம் லாரி ஓட்டுனர்களாக மாறுவது சரியானது தானா என்று நினைக்கும் போது நெருடல் ஏற்படத்தான் செய்கிறது. வேறு பல தொழில்களை அரசாங்கமே உருவாக்கிக் கொடுக்கும் போது அதனைப் பயன்படுத்திக் கொள்ளுவதுதானே புத்திசாலித்தனம் என்று நமக்குத் தோன்றுவதில் வியப்பு ஏதுமில்லை.
'இது தான் எனக்குப் பிடித்த தொழில்' என்றால் அதனைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. ஆனால் வெளியே இன்னும் நூற்றுக்கான பல கைத்தொழில்கள் இருக்கின்ற என்பதை மறக்க வேண்டாம். மித்ரா வேறு தொழில்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த நேரத்தில் வலியுறுத்துகிறோம்.
ஒரு வகையில் நாம் திருப்தியுறுகிறோம். காரணம் இந்தப் பயிற்சியின் மூலம் வருங்காலங்கலில் நமது இளைஞர்கள் லாரிகளின் மூலம் சொந்தத் தொழில் செய்வதற்கான வாய்ப்புக்களும் அமையும் என்கிற ஒரு திருப்தி உண்டு. அதனாலேயே இந்தத் பயிற்சியைப் பாராட்டுகிறோம்.
வாழ்த்துகள்!
No comments:
Post a Comment