Sunday 30 September 2018

முண்டியடிக்கும் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள்..!

நடைபெறப்போகும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலிலிருந்து கிடைக்க பெறும்   பல செய்திகள் நம்மை மகிழ வைக்கின்றன.

ஆமாம்,  அடுத்த பிரதமரமாகப்  பொறுப்பேற்க விருக்கும் பி.கே.ஆர். ரின் அன்வார் இப்ராகிம் அந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது நாடறிந்த செய்தி. அன்வார் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் போட்டியிடுவது அவரது துணிச்சலைக் காட்டுகிறது.

போர்ட்டிக்சன் தொகுதி அதன் பின்னர் தெலுக்கெமாங் தொகுதி இப்போது  போர்ட்டிக்சன் தொகுதி. தொகுதியின் பெயர் தான்  மாற்றம் அடைந்ததே தவிர போர்ட்டிக்சன் அப்படி ஒன்றும் பெரிய மாற்றத்தைக் காண முடியவில்லை. எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரி தான்.  போர்ட்டிக்சன் ஒரு சுற்றலா நகரம். ஆனால் அது ஒரு  சுற்றுலா நகரமாக பெரிய அளவு மாறவில்லை. மாற்றம் என்பதெல்லாம் அம்னோ கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான். அத்தோடு ம.இ.கா. வினரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது அன்வார் இங்குப் போட்டிப் போடுவது   நெகிரி செம்பிலானுக்கே ஒரு பெரிய மாற்றம் வரும் என எதிர்ப்பார்க்கலாம்.  அதுவும் போர்ட்டிக்சன் நகரத்திற்கு நல்லதொரு மாற்றம் வரும். இப்போது சிங்கப்பூரிய முதலீட்டாளர்கள் போர்ட்டிக்சனில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதாக அன்வார் கூறியிருப்பது நல்ல செய்தி. சிங்கப்பூர் என்பது மட்டும் அல்ல மற்ற நாட்டு முதலீட்டாளர்களும் இங்கு முதலீடு செய்ய முன்வருவார்கள் என நாம் நம்பலாம்.

இது தான் அன்வாரிடம் உள்ள தனிப்பட்ட ஆளுமை எனலாம். அவரிடம் உண்மை இருக்கிறது. நேர்மை இருக்கிறது. நாட்டை சிறப்பாக வழி நடத்தும் ஆற்றல் இருக்கிறது. ஊழலை வெறுப்பவர்,  லஞ்சம் வேரறுக்கப்பட வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டிருப்பவர். எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் அவரை நம்புகின்றனர். அவரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என உறுதியாக இருப்பவர்.

முதலீடுகளை நாம் வரவேற்கிறோம். நிறைய முதலீடுகள் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கும். நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். 

சிங்கப்பூர் முதலீட்டாளர்களை வரவேற்கிறோம். அடுத்த பிரதமர் என்னும் அங்கீகாரத்தோடு வலம் வரும் அன்வார் மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நாமும் நம்புகிறோம்.

வருக! வருக!

No comments:

Post a Comment