Tuesday 25 September 2018

கள்ளச் சாராயம் ...!


கள்ளச் சாராயம், நச்சுத்தன்மை கலந்து மதுபானம் - இது போன்ற செய்திகளப் படிக்கின்ற போது ஏதோ இந்தச் செய்திகள் வெளி நாட்டில் குறிப்பாக இந்தியா,  வங்களாத தேசம், பாக்கிஸ்த்தான் போன்ற நாடுகளில் தான் நடக்கின்றன என்பதாகத்தான் நமக்குத் தோன்றும். 

ஆனால் இது நமது கண்முன்னே நமது மலேசிய நாட்டில் நடக்கிறது என அறியும் போது  நிச்சயமாக அது நமக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது.

பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் கூறிய செய்தி இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இதற்கும் தமிழ் நாட்டிற்கும் ஏதும் தொடர்பு  இருக்குமோ என நினக்கத் தோன்றுகிறது. மதுக் கடைகள் பள்ளிக்கூடங்களிலிருந்து  ஒரு கிலோ மீட்டர் தொலைவு இருத்தல் வேண்டும்  என்பது விதியாம். மது விற்பவர்கள் அதனையெல்லாம் பொருட்படுத்துவதில்லை! கோயில்கள் அருகிலேயே  மது விற்பனை செய்கிறார்களாம்.  தமிழ் நாட்டில் அரசியல்வாதிகள் சாராயக்கடைகளை நட்த்துகிறார்கள். அதனால் தமழக அரசாங்கம் அதனை ஏற்றுக் கொண்டது. ஆனால் நமது அரசாங்கம் அதனை எப்படி ஏற்றுக்கொண்டது? ஒரு வேளை ம.இ.கா. வினர் மதுக்கடைகளை நடத்துகின்றனரோ?  ஓர் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் ம.இ.கா.வினர் சாராயம் விற்பதை கேள்விப்பட்டிருக்கிறேன் இப்போது அவர்களின் எல்லை விரிந்துவிட்டிருக்கும்

நச்சுத்தன்மை கலந்த மதுபானத்தை அருந்தி உயிரைப் போக்கிக் கொண்டவர்கள் சுமார் 38 பேர் என்பதாகச் செய்திகள் கூறுகின்றன. இறந்தவர்களில் மியன்மார், நேப்பாளம், இந்தியா, வங்காள தேசிகள் மேலும் நமது உள்ளூர் வாசிகள். அதிகமானோர் மியான்மார்,  நேப்பாளத்தைச் சேர்ந்தவர்கள்.

நாம் கொடுக்க வேண்டிய செய்தி ஒன்று தான்.  இந்த இறப்புக்களின் காரணர்கள் யாரோ அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அத்தோடு அவர்களின் உரிமம் ரத்துச் செய்யப்பட வேண்டும்.

குடியை நாம் ஒழிக்க முடியாது. அது  உலகறிந்த விஷயம். ஆனால் தரமற்றக் கள்ளச் சாராயங்களை தயாரிக்கும் நிறுவனங்களை இழுத்து மூடப்பட  வேண்டும்.  இறந்து போனவர்கள் குடும்பத்திற்கு தயாரிப்பு நிறுவனங்கள் போதுமான நஷ்டஈடு கொடுக்க வேண்டும். ஆமாம், குடிகாரன் குடிப்பதற்கு இலவசமாக மதுபானத்தை  யாரும் கொடுப்பதில்லை. அவனும் பணம் போட்டுத்தான் வாங்கிக் குடிக்கிறான். அவன் பணம் போட்டு வாங்கிக் குடிப்பது தரமான பொருளாக இல்லை என்றால் அதற்கு அதனை வெளியிடும் நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

குடிப்பது உடல் நலனுக்குக் கேடு! அதை விற்பது  விற்பவன் குடும்பத்திற்குக் கேடு!

No comments:

Post a Comment