Monday 17 September 2018

பத்திரிக்கையிலும் குண்டர்களா...?

நாம் வாசிக்கும்  தினசரி நாளிதழ் கிடைக்கவில்லை என்றால் எதனையோ இழந்தது போல், எல்லாமே இயங்காதது போல், ஓர் ஏமாற்றம்  ஏற்படும்! அதுவும் தினசரி வாசிப்பவர்களுக்கு அது இன்னும் பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்கும்.

நான் தமிழ் மலர் வாசகன். கடந்த ஞாயிற்றுக் கிழமை (16.9.2018) தமிழ் மலர் கிடைக்கவில்லை. வழக்கமாக வாங்குபவரிடம் விசாரித்தேன். பத்திரிக்கை வரவில்லை என்றார். ஏன்? தெரியவில்லை, சிரம்பானில் கிடைக்கவில்லை! என்றார்.

நான் கட்டுரை பிரியன். தலைமையாசிரியர் எம்.ராஜனின் கட்டுரை, ந.பச்சைபாலனின் கட்டுரை, வழக்கறிஞர் சீலனின் கட்டுரை  -  இவர்கள் எழுதும் கட்டுரைகள் எல்லாம் எனக்குப் பிடிக்கும். மற்ற நாள்களி,ல் மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் கட்டுரைகள் எனக்குப் பிடித்தமானவை.  ஜெர்மனியிலிருந்து எழுதுகின்ற ஒரு பேராசிரியையின் கட்டுரையையும் வாசிப்பதுண்டு.

இதனை ஏன்  நான் சொல்லுகிறேன் என்றால் இவைகள் எல்லாம் தினசரி பழக்கங்கள். இந்த ஞாயிற்றுக் கிழமை குறிப்பாக மூன்று கட்டுரைகளை நான் இழந்துவிட்டேன்! 

 தினசரி பத்திரிக்கைகள் வருவதில் ஏன் இந்த சுணக்கம்? பத்திரிக்கைக்களிடையே உள்ள போட்டி ஒரு காரணமாக இருக்கலாம். அதுவும் ஞாயிறு பதிப்பு முக்கியமானது. அதனால் மற்ற பத்திரிக்கைகள் அந்த குறிப்பிட்ட தினசரியை வாசகர்களுக்குப் போய்ச் சேராதவாறு "உருவி" விடுவார்கள்! ஏற்கனவே இதனை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்!  குண்டர் கும்பல்கள் எல்லாத் துறைகளிலும் புகுந்து விட்டார்கள்! என்ன செய்வது?  அல்லது இப்படியும் நடக்கலாம். பத்திரிக்கையை வைத்துக் கொண்டே அந்தப் பத்திரிக்கை இல்லை என்று சொல்லலாம்! அதை நானே பார்த்திருக்கிறேன்! அதற்குக் காரணம் ஏதோ ஒரு  பத்திரிக்கை  அவர்களுக்குக் கமிஷன் அதிகமாக கொடுப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கும்!

எல்லாத் துறைகளிலும் பணம் விளையாடுவது போல்  இங்கும் விளையாடுகிறது! இதையெல்லாம் மீறி தான் பத்திரிக்கைகள் செய்திகளைக் கொண்டு வருகின்றன. கௌரவமே இல்லாதவர்கள் எல்லாம் பத்திரிக்கைத் துறைக்கு வந்தால் இப்படித்தான் நடக்கும். அரசியல்வாதி என்றைக்குப் பத்திரிக்கையில் தலையிடுகிறானோ அன்றே பத்திரிக்கைகளும் அரசியல் நடத்த வேண்டியுள்ளது!

பத்திரிக்கைகள் என்பது அறிவு சார்ந்தது. மக்களுக்கு உலக விஷயங்களைக் கொண்டு வருவது. ஏனோ தமிழன் மட்டும் எல்லாவற்றிலும் அறிவை இழந்து சொந்தப் பிரச்சனைகளைக் கொண்டு வருகிறான்!

இப்போது மூன்று கட்டுரைகள் போய்விட்டன! என்ன செய்யலாம்?

No comments:

Post a Comment