Monday 3 September 2018

நீங்களுமா....?

ஜோகூர் மாநில ம.இ.க. வைப் பற்றி மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு இராமகிருஷ்ணன் கூறிய செய்தியைப் படித்த போது "அடேய்! நீங்களுமா இப்படி!" என்று கேட்கத் தோன்றவில்லை! செருப்பால் அடிக்க வேண்டும் என்று  தோன்றியது!

பாரதி ஒரு செய்தியைச் சொன்னான்:  படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்!

இங்கு தவறு செய்பவர்கள்  அனைவரும் படித்தவர்கள்.  சரி, அப்படியே அவர்கள் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கவில்லை என்றாலும் அவர்கள் படித்தவர்கள். பாரதியின் வாக்குப்படி போவான் போவான் ஐயோ என்று போவான்!  அதாவது சாதாரண மக்களின் சாபத்தின்படி:  டேய்! உன் குடும்பம் நாசமாப் போகும்! உன் குடும்பமே விளங்காம போகும்! என்று இவர்களது சாபமும் பாரதியின் வாக்கும் ஒரே செய்தியைத்தான் சொல்லுகின்றன!

இந்திய சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட எண்பது லட்சம் வெள்ளியை ஐந்தே மாதத்தில் - அதாவது  இந்த ஆண்டு  மே மாததிற்குள் - அனைத்துப் பணத்தையும் கபளீகரம் செய்துவிட்டனர் என்பது  பெரிய சாதனை தானே! ஒரு தமிழ்ப்படத்தில் ரஜினி ஒரு மாதத்தில் ஆயிரம் கோடியைச் செலவு செய்ய படாதபாடுபடுவார்!  பைத்தியக்காரர்! நமது ம.இ.க. வினரைக் கேட்டால் ஆயிரம் வழிகளைச் சொல்லுவார்கள்!

நமக்குள்ள ஆச்சரியம் எல்லாம் இது எப்படி இவர்களால் முடிகிறது என்பது தான். படித்திருக்கிறான். படித்தவன் என்று சொல்லிக் கொள்ளுகிறான். தான் பெரியவன் என்று மக்களிடம் சொல்லுகிறான். மக்கள் என்னை ஆதரிக்கிறார்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறான். மக்களுக்குத் தொண்டு செய்ய வந்தேன் என்று  சொல்லுகிறான். டேய்! தொண்டு செய்ய வந்த நீ இப்படி ஏன் நீயே உனக்காகக் குழி தோண்டி கொள்ளுகிறாய்?  சாகும் போது இங்குள்ள அனைத்தையும் நீ கையோடு கொண்டு போவாயோ!  நாயே! கேள்! அரசியல் மூலம் பெரிய ஆள் ஆனான்.  பெரிய மாளிகைக் கட்டினான்! அதனுள் நீச்சல் குளம் கட்டினான்! அதனை அவனால் அனுபவிக்க முடியவில்லை. சீக்கிரம் மண்டையைப் போட்டான்! அவ்வளவு தான். முடிந்தது அத்தியாயம்! இப்போது அவனை நினைப்பார் யாருமில்லை! உங்கள் வீட்டுப் பணத்தில் எதனையும் செய்யுங்கள். யாரும் கேட்கப் போவதில்லை.

ஆனால் ஒரு நிமிடம் யோசியுங்கள். மக்கள் பணத்தில் கை வைக்காதீர்கள். உங்கள் பணத்தில் ஆடுங்கள் பாடுங்கள்! அடுத்தவன் பணத்தில் வாழ நினைக்காதீர்கள்! 

ஒன்று மட்டும் உண்மை. உங்களுக்கான சிறை தயார் நிலையில் வரவேற்கக் காத்துக் கிடக்கிறது! 

No comments:

Post a Comment