Tuesday 4 September 2018

'மாமாக்' மகாதிர்!

மகாதீரை 'மாமாக்' என்பதெல்லாம் இன்று நேற்று வந்ததல்ல. அவர் எப்போது அரசியலுக்கு வந்தாரோ அப்போதிருந்தே இந்த மாமாக் என்ற சொல் அவரோடு ஓட்டிக்கொண்டது!

அப்போதும் மகாதிரை மாமாக் என்று சொன்னவர்கள் எதிர்க்கட்சியினர். இப்போதும் அவரை மாமாக் என்று சொல்லுபவர்கள் எதிர்க்கட்சியினர் தான்! அப்போது எதிர்க்கட்சியினர் என்றால் அது ஜனநாயக செயல் கட்சியைக் குறிக்கும்.  இப்போது எதிர்க்கட்சியினர் என்றால் அது அம்னோவினரைக் குறிக்கும்.  முன்பு சீனர்கள் கட்சி என்பார்கள். இப்போது மலாய்க்காரர் கட்சி என்கிறோம். ஆக, தொடர்ந்தாற் போல அவர்,  அவரது முதாதயரைக் குறி வைத்துத்  தாக்கப்படுகிறார்! இந்த அளவுக்கு வேறு யாரும் மலேசிய அரசியலில் தாக்கப்படவில்லை  என நிச்சயம் சொல்லலாம்!

சரி மாமாக் என்றால் யார்? கேரள காக்கா என்கிறோம்.  கேரள மலபார் இனத்தவரை மாமாக் என்கிறோம். நமது நாட்டில் உள்ள கேரள இனத்தவரைப் போல இவர்கள் தங்களை மலையாளிகள் என்று சொல்லுவதில்லை.  அப்படி சொல்லுவதிலும் இவர்கள் விரும்புவதில்லை. தங்களுக்கு என்று தனி அடையாளத்தை விரும்புகின்றனர். அதனால் தங்களை மலபாரி என்று கூறிக் கொள்ளுவதில் பெருமைப்படுகின்றனர்.  இளம் தலைமுறையினருக்கு மலபாரி என்றால் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கூடத் தெரியாது என்பது தான் உண்மை! கேரளாவுடன் தொடர்பு உள்ளவர்கள் மட்டுமே அறிவர்.

ஆனால் மகாதிர் நீண்ட காலம் அரசியலில் உள்ளவர் என்பதால் அவருக்கு இந்த மாமாக் என்கிற அடையாளம் அவருடன் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவருடைய  தாத்தா கேரளாவிலிருந்து வந்தவர் என்பதைத் தவிர அதன் பின் அவர் இந்நாட்டோடு கலந்துவிட்டவர். அவர் சிங்கப்பூர் பலகலையில் மருத்துவம் படிக்க அனுமதிக்கப்பட்ட போது அவர் இந்தியர் என்பதாகவே பதிவாயிருக்கிறது. மாமாக் எனகிற வார்த்தை எல்லாம்  அப்போது  பயன்பாட்டில் இல்லை.

இப்படி மாமாக் என்பதால் அவர் என்ன வெட்கப்படுகிறாரா?  அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. யார் என்ன சொன்னாலும் அது பற்றி அவர் கவலைப்படுவதில்லை. சஞ்சிக்கூலிகளாக இந்தியர்கள் இந்நாட்டிற்கு வந்த காலகட்டத்தில்  படித்த ஒரு சிலர் வேவ்வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆசிரியர், அரசாங்க உத்தியோகம்,  ரயில்வே போன்று பல தரப்பட்ட வேலைகளைச் செய்து வந்திருக்கின்றனர். அவர்களைப் போல இவரது முன்னோர்களும் அடங்குவர். இதில் ஏதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

புஜிஸ் என்று சொல்லிக் கொண்டு கொள்ளைகாரனாக இருப்பதைவிட கௌரவமாக வாழ்வது எவ்வளவோ மேல்.

மாமாக் மகாதிர் வாழ்க!

No comments:

Post a Comment