Monday 27 May 2019

கேள்வி - பதில் (100)

கேள்வி

தமிழகத்தில் "நாம் தமிழர் கட்சி" தாக்குப் பிடிக்குமா?

பதில்

தாக்குப் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. தாக்குப் பிடிக்க வேண்டும் என்பதே நமது விருப்பமும் கூட. 

நாம் தமிழர் கட்சி மிகவும் பலமான கட்சிகளுடன் மோதுகின்ற நிலையில் உள்ள ஒரு கட்சி. பலம் என்று சொல்லும் போது கொள்கையால் அல்ல. தி.மு.க. வும் அ.தி.மு.க். வும் பலம் வாய்ந்த கட்சிகள். அவர்களுடைய சின்னமே அவர்களின் பலம்.  அவர்களின் உதய சூரியன், இரட்டை  இலை சின்னங்கள் தான் இன்னும் பழைய தலைமுறையினருக்கு மனதில் நிற்கும் சின்னங்கள்.  அவர்கள் ஏன் எதற்கு வாக்களிக்கிறார்கள் என்கிற தெளிவு அவர்களுக்கு இல்லை.  அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் கருணாநிதி -ஜெயலலிதா மட்டும் தான்.  அவர்கள் தமிழ் நாட்டுக்குச் செய்த துரோகங்கள் எதுவும் அவர்களுக்குத் தெரிவதில்லை. அவர்களுக்கு இலஞ்சம் கொடுத்து தமிழ் நாட்டுக்குச் செய்கின்ற துரோகங்களை மறைக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை!

நாம் தமிழர் கட்சி முற்றிலுமாக புதிய தலைமுறை வாக்காளர்கள், படித்தவர்கள் போன்றவர்களை ஈர்க்கின்ற ஒரு கட்சியாகச் செயல்படுகின்றது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழக இடைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி திருப்திகரமாகவே இருக்கிறது என்று சொல்லலாம். இதனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களுக்கு வாக்குகள் விழக்கூடாது என்பதற்காக மிகப்பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன.  வாக்குச் சீட்டுக்களில் அவர்களின் விவசாயி சின்னம் தெளிவற்ற நிலையில் அச்சடிக்கப்பட்டிருந்தன, ஊடகங்கள் நாம் தமிழர் கட்சி என்று ஒன்று இருப்பதாகவே காட்டிக் கொள்ளவில்லை. அனைத்து ஊடகங்களும் நாம் தமிழர் கட்சியைப் புறக்கணித்தன. அவர்களும் யாருக்கும் எந்த இலஞ்சமும் கொடுக்கவில்லை. இலஞ்சம் இல்லாத, ஏற்காத ஒரு கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி  மட்டுமே! இருந்தும் அக்கட்சி மூன்றாவது நிலையில் தமிழ் மக்களால ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.  

இப்போது தான் தமிழ் மக்கள் தங்களெக்கென்று ஒரு கட்சி, தமிழர்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதை முதன் முதலாக உணர்ந்திருக்கின்றனர். இனி வரும் தமிழர் தலைமுறை நாம் தமிழர் என்பதை உறுதிப்படுத்துவர். 

நாம் தமிழர் கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது.  நாம் தமிழர் என்கிற உணர்வும் இப்போது தான் நமக்கும் வளர ஆரம்பித்திருக்கிறது.

நிச்சயமாக நாம் தமிழர் கட்சி தாக்குப் பிடிக்கும்!

No comments:

Post a Comment