Thursday 2 May 2019

ஸாகிர் நாயக் செய்வது சரியா..?

ஸாகிர் நாயக் நமது மலேசிய நாட்டில் அடைக்கலம் புகுந்திருக்கிறார். அவருக்கு இப்போது ராஜ மரியாதை. அவர் நிரந்தரமாக தங்க அனுமதிக்கப்பட்டவர், அவர் குடியுரிமை பெற்றவர் என்றும் சொல்லப்படுகின்றது.

ஓர் இஸ்லாமியர், இஸ்லாமிய நாட்டில் அடைக்கலம் கொடுக்கப்ப்பட்டிருப்பது ஒன்றும் புதிதல்ல. இயல்பு தான்.  ஆனால் இன்றைய நிலையில் பல இஸ்லாமிய நாடுகள் அவரின் கொள்கைகளையோ,  அவரின் தத்துவங்களையோ ஏற்றுக் கொள்ள வில்லை என்பது தான் உண்மை.

காரணம் அவர் மத தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறார் எனபதாகக் குற்றச்சாட்டு அவர் மேல் உண்டு. 

ஆனால் மலேசிய இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை ஸாகிர் நாயக் குற்றமற்றவர் என்று நினைக்கின்றனர்.  "அவர் அப்ப்டி என்ன செய்து விட்டார் அவரிடம் குறை காண்கின்றார்கள்" என்பது அவர்களின் பொதுவான கருத்து.  

நான் சந்தித்த சராசரியான இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை அவர் சொல்லுவது சரிதான் என்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் சமயங்களைப் பற்றி அரைகுறையான அறிவைக் கொண்டவர்கள்.  அவர்களுக்கு ஸாகிர் நாயக் இஸ்லாமியத் துறையில் ஒரு கல்விமானாக நினைக்கின்றனர். அது சரியே!

இஸ்லாமியத் துறையைச் சார்ந்த கல்விமான் என்பது வேறு.  மற்றபடி மற்ற சமயங்களைப் பற்றியான கல்விமான் என்பது வேறு. நிச்சயமாக அவர் இஸ்லாம் தவிர மற்ற எந்த மதத்தைப் பற்றியும் அறியாதவர்.  அவர் இந்தியர். அவர் இந்தியாவில் மக்களிடையே உள்ள வெவ்வேறு பழக்க வழக்கங்களைக் கொண்டு அவர்களின் சமயங்களை எடை போடுபவர்.  அதனை மேற்போக்காக பார்த்து இந்து சமயத்தைப் பற்றி பேசுபவர்.  அவர் இந்து சமயக் கல்வியைப் பெறாதவர். அவர் எந்த வகையிலும், இஸ்லாமிய மதத்தைத் தவிர, மற்ற மதங்களின் சமயக் கொள்கைகளை அறியாதவர். 

ஆனாலும் மற்ற சமயங்களை இழிவு படுத்துவது மூலம், கேலி செய்வதன் மூல, கிண்டல் செய்வதன் மூலம்  கை தட்டல் வாங்குபவர்! அத்தோடு அவர் நிற்கவில்லை.  தனது சொந்தக் கருத்தாக தீவிரவாதத்தையும் அவர் ஊக்குவிக்கிறார். அது ஏன் என்பது நமக்குத் தெரியவில்லை. இந்தியாவில் அவர் சந்தித்த சாதி வித்தியாசங்களோ, ஏற்றத் தாழ்வுகளோ, தான் தாழ்த்தப்பட்டவன் என்பதோ  ஏதோ  ஒன்று  அவரைப் பாதித்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. 

இல்லையென்றால் அவருக்கு ஏன் மற்ற மதத்தினர் மேல் இந்த வன்மம்?  ஸாகிர் நாயக் செய்வது சரியல்ல என்பது தான் நமது நிலைமை. அவர் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும். அவர் சரியானவராக இருந்தால் அவர் இந்திய நீதிமன்றத்தை எதிர்கொள்ள வேண்டும். 

மலேசிய இந்தியர்களை வைத்து மத ரீதியாக தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். தன்னை ஓர் இஸ்லாமிய வீரராக காட்டிக் கொள்ளும் ஸாகிர் நாயக் - ஒரு வீரரைப் போலவே நடந்து கொள்ள வேண்டும்!

No comments:

Post a Comment