Wednesday 1 May 2019

அந்நியத் தொழிலாளர்கள்...!

அந்நியத்  தொழிலாளர்கள் பிரச்சனை என்பது நமது நாட்டில்  அஞ்சும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது.

மே தினத்தன்று நமது பிரதமர் டாக்டர் மகாதிர் ஒரு செய்தியைச் சொல்லியிருக்கின்றார். செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யாமல். சோம்பித் திரிந்தால் வந்தவன்  உயர்ந்து கொண்டே போவான் இருப்பவன் இருப்பதையும் இழந்து கொண்டே போவான் என்பதாக!

ஒரு சில வேலைகளை நாம் செய்ய்த் தயங்குகிறோம் என்பது உண்மை தான். அதனை வெளி நாட்டுத் தொழிலாளர்கள் செய்வது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது தான். வெளி நாட்டுத் தொழிலாளர்கள் என்பதை விட  அகதிகளுக்கு அந்த வேலைகளைக் கொடுத்தால் என்ன என்று ஒரு சாரார் கூறுவதிலும் நியாயமுண்டு என்பதை மறுப்பதறகில்லை>

ஆனால் நாம் அது பற்றிப் பேசப் போவதில்லை. வெளி நாடுகளிலிருந்து தொழிலாளர்களாக வந்தவர்கள் இப்போது நமது வாரச் சந்தைகளில் வணிகம் செய்கிறார்களே அது எப்படி நடக்கிறது?  அவர்கள் வணிகம் செய்ய யார் அனுமதி கொடுத்தது?  வாரச் சந்தைகள் மட்டும் அல்ல இப்போது எல்லா வீடமைப்புகளிலும்  அவர்களின் வணிகம் கிளைவிட்டுக் கொண்டே இருக்கிறதே யார் அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்?  இதில் முன்னணியில் நிற்பவர்கள் வங்காள தேசிகள், பாக்கிஸ்தானியர் - இவர்கள் மலேசியர்களின் தொழில்களை அழித்துக் கொண்டு வருகிறார்களே - இது எப்படி நடக்கிறது?  இவர்களின் இலக்கு உள்நாட்டு இந்தியர்களின் தொழில்களை அழிப்பது தான்.  நாம் கேட்பதெல்லாம் இவர்களை இந்த அளவுக்கு வளர்த்து விட்டவர்கள் யார்? 

டாக்டர் மகாதிர் அந்நியத் தொழிலாளர்களைப் பற்றி மட்டும் தான் பேசுகிறார்.  அதுவும் அதில் பலர் கள்ளக் குடியேறிகள்! ஆனால் இவர்கள் எப்படி வணிகம் செய்யும் அளவுக்கு உயர்ந்தார்கள்?   கள்ளக் குடியேறிகளை வணிகம் செய்யும் அளவுக்கு வளர்த்து விட்டவர்கள்  யார்? அரசாங்கம் தானே!

நிச்சயமாக  நாம் இதனை வரவேற்கவில்லை.  எந்த ஓர் அரசாங்கமும் இப்படிச் செய்வதில்லை.  சொந்த நாட்டு மக்களின் நலன் தான் முக்கியமே தவிர வெளி நாட்டவரின் நலன் அல்ல. வேலை செய்ய வந்த வெளி நாட்டவர்களுக்கு அவர்களுக்கான ஊதியம் மற்றும் வீட்டு வசதிகள் கொடுக்கப்பட வேண்டும். அவர்களின் நலன் காக்கப்பட வேண்டும். 

ஆனால் இங்கு வணிகம் செய்யும் அளவுக்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கச் செய்த முந்தைய அரசாங்கத்தை வழி நடத்தியவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். இப்போதும் அதனைத் தொடர்பவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

இப்போது நடப்பது அந்நியத் தொழிலாளர்களின் ஆதிக்கம்.  அனைத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. இதனை எப்படி சரி செய்யப் போகிறார்கள்?  பொறுத்திருந்து பார்ப்போம்!

No comments:

Post a Comment