பக்காத்தான் அரசின் மிகப்பபெரிய பின்னடைவு என்றால் அது விலைவாசி ஏற்றம் என்பது தான்!
விலைவாசி ஏற்றம் குறைய வேண்டும் என்பது நமது ஆசை மட்டும் அல்ல அரசாங்கத்தின் ஆசையும் கூட. ஆனால் விலை ஏற்றம் குறையவில்லை! ஒரு முறை ஏறினால் பின்னர் அது குறையும் என்று நாம் சொல்லிவிட முடியாது. அது வியாபாரிகளின் கையில் என்பது தான் நமது அனுபவம்.
ஆனால் பக்காத்தான் அரசாங்கம் அதனை எப்படி கையாளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இப்போதைக்கு நாம் பாராட்ட வேண்டிய அம்சம் பெட்ரோல் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான். குறைக்கவும் இல்லை கூட்டவும் இல்லை என்பதால் நாம் நிம்மதிப் பெருமூச்சு விட முடிகிறது! பெட் ரோல் விலை குறைந்தால் பொருள்களின் விலையும் குறையும் என்பது பொதுவான அபிப்பிராயம். பொது மக்களைப் பொறுத்தவரையில் பெட் ரோல் விலை குறைந்தால் மகிழ்ச்சியே!
ஆனால் வியாபாரிகளைப் பொறுத்தவரை பெட்ரோல் விலை குறைந்தாலும் பொருள்களின் விலையைக் குறைப்பார்களா என்பது தெரியவில்லை. குறைய வைப்பது அரசாங்கத்தின் கையில். அதனைக் கண்காணிப்பது அரசாங்கத்தின் கையில். வியாபாரிகள் அவ்வளவு சுலபமாக எந்த விலையையும் குறைத்து விட மாட்டார்கள்!
எது எப்படி இருந்தாலும் எண்ணைய் விலை குறைந்தால் மட்டுமே மேற் கொண்டு நாம் விலைவாசிகளைப் பற்றி பேச முடியும்.
இப்போது மலேசியர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான விலை குறைப்பு என்றால் அது தினசரி பயன்படுத்தும் உணவுப் பொருள்களின் விலையே. காய்கறிகள் விலை கட்டுப்பாடு இல்லாமல் ஏறிக் கிடக்கிறது என்பது உண்மையே! தினசரி பயன்படுத்தும் சமயலறை சமாச்சாரங்கள் அனைத்தும் விலை ஏறிவிட்டன. எதனை வாங்குவது, எதனை உண்பது என்பதே போராட்டமாகப் போய்விட்டது!
பக்காத்தான் அரசாங்கத்தின் மிகப் பெரிய சவால் என்பது உணவுப் பொருள்களின் விலை ஏற்றமே! அரசாங்கம் எப்படி சமாளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முதல் ஆண்டு மக்களைப் பொறுத்தவரை முகம் சுளிக்க வைத்த ஆண்டு தான். முகத்தில் மகிழ்ச்சி இல்லை. இரண்டாம் ஆண்டை நோக்கி நகருகிறது பக்காத்தான் அரசாங்கம். விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்தமா என்பதை இனி தான் பார்க்க வேண்டும்!
No comments:
Post a Comment