Sunday 19 May 2019

இதற்கும் விளம்பரம் தேவை...!

அரசாங்க கல்லூரிகளில் தொழில் கல்வி பயிலுவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. அதிலும் முன்பை விட இப்போது இன்னும் வாய்ப்புக்கள் அதிகம்.  ஒரு காலத்தில் இந்தக் கல்லுரிகளில் இந்திய இளைஞர்கள் வாய்ப்புக்கள் கிடைக்காமல் தடுமாறினர் என்பதெல்லாம் பொய்யல்ல! உண்மை!  ஏன் எடுக்கவில்லை என்பதற்கான காரணங்கள் இது நாள் வரை தெரியவில்லை! 

இந்திய மாணவர்கள்  அரசாங்கக் கல்லூரிகளில் கல்வி பயில  - தொழில் கல்வி பயில -  தடையாக இருந்தவர்கள் ம.இ.கா.வினர் தான் என்பதாகவும் பேச்சு உண்டு!  காரணம் பல தனியார் தொழில் கல்விக் கூடங்களை  நடத்தியவர்கள் ம.இ.கா. வினர் தான் என்பதும் உண்மையே!

எனக்குத் தெரிந்த ம.இ.கா. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மிகவும் ஆடம்பரமாக ஒரு தொழில் கல்வி நிலையத்தை திறந்தார்.  அந்தக் கல்வி நிலையத்தில்  நிறைய  இந்திய  மாணவர்கள் ஆடுமாடுகளைப் போல கொண்டு வந்து சேர்க்கப்பட்டனர்!  சேர்த்துக் கொண்ட வந்த ம.இ.கா. தலைவர்களுக்கு மன நிறைவான கமிஷன் கொடுக்கப்பட்டது!

உடனடியாக அந்த மாணவர்கள் அனைவருக்கும்  அரசாங்கக் கல்விக் கடன் கொடுக்கப்பட்டது!  ஒவ்வொரு மாணவருக்கும் கல்விக் கடன் கொடுக்கப்பட்டதும் அப்புறம் "நீ யாரோ!  நான்  யரோ!"  தான். வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி!  நிர்வாகத்திற்குக்  கிடைக்க வேண்டிய பணம் வந்துவிட்டது!  முறையான கல்வி அவர்களுக்குக்  கொடுக்கப்பட வில்லை. அவர்கள் படித்ததற்கான அத்தாட்சியிம் இல்லை! ஆனால் அந்த மாணவர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு நிரந்தர கடன்காரர்கள் ஆனார்கள்! பல இலட்சங்கள் பணம் சம்பாதித்த பிறகு அந்த நிறுவனம் மூடப்பட்டு விட்டது!  அது தான் ம.இ.கா.!

இபப்போதும் சில தனியார் நிறுவனங்கள் பத்திரிக்கைகளில் விளம்பரங்களைப் போடுகின்றனர். ஏதேதோ இலவசம் என்கின்றனர். கல்வியே இலவசம் என்கின்றனர்! இந்திய மாணவர்களை ஈர்ப்பதற்கு என்னன்னவோ இலவசம் என்கின்றனர்!  மாணவர்களை நிரந்தர கடனாயாளிக்க இலவசம் என்கின்றனர்.

இப்படிச் செய்வது நமக்கும் வருத்தம் தான். ஆனால் இந்த நேரத்தில் துணை அமைச்சர் சிவராசா அவர்களைப் பாராட்டுகிறேன். அவர் அமைச்சை சேர்ந்த கல்வி நிறுவனங்களுக்குக்காக அவர் பலமுறை பத்திரிக்கைகளில் தனது பேட்டியின் மூலம் விளக்கம் கொடுத்து வந்தார். அந்த விளம்பரங்கள் நிச்சயமாக மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதனையே தான் இப்போது மனித வள அமைச்சும், கல்வி அமைச்சும் செய்ய வேண்டும். இந்த இரண்டு அமைச்சுகளின் கீழ் பல தொழிற் கல்விக் கூடங்கள் இயங்குகின்றன. குறிப்பாக அமைச்சர் குலசேகரன் புக்கிட் மெர்டாஜம் ஆறுமுகம் கல்லூரியைப் பற்றி அடிக்கடி நினைவுறுத்துகிறார்.  இன்னும் கல்வி அமைச்சின் கீழ் பல தொழிற் கல்வி நிலையங்கள் இயங்குகின்றன.  ஆனால் அதன் விபரங்கள் மாணவர்களிடம்  போய்ச் சேரவில்லை. பத்திரிக்கைகளின் மூலம் செய்திகள் பரவ வேண்டும்.

எல்லாத் தகவல்களும் இணையத்தில் கிடைக்கும் என்பது உண்மை தான். ஆனால் நமது மாணவர் சமுதாயமோ அல்லது பெற்றோர்களோ அதனை அறியவில்லை என்பது தான் உண்மை. மாணவ சமுதாயம் சினிமா தவிர வேறு எதுவும் வேண்டாம் என்னும் மனநிலையிலிருந்து இன்னும்  மாறவில்லை!  பெற்றோர்களும் அதே மனநிலை தான்!

இப்போது அரசாங்கம் செய்ய வேண்டியதெல்லாம் குறைந்தபட்சம் இன்னும் ஒரு நான்கு ஆண்டுகள் அவர்கள் தொடர்ந்து தொழிற் கல்வி பற்றியான விளம்பரங்கள் செய்ய வேண்டும். தனியார் துறையை முடிந்தவரை நமது மாணவர்கள் ஒதுக்க வேண்டும். கடகாரராவதைத் தடுக்க வேண்டும்.

நமது தமிழ் மாணவர்களை அரசாங்கக் கல்லூரிகள் பக்கம் இழுக்க வேண்டும். அதுவே நமது முக்கிய கடமையாக இருக்க வேண்டும்.

ஆக, விளம்பரம்! விளம்பரம்! விளம்பரம்! அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு  அதுவே நமது மந்திரம்!

No comments:

Post a Comment