Monday 27 May 2019

செடிக் போலவே மித்ரா....?

செடிக் போலவே மித்ரா!" என்கிறார் இந்து உரிமை போராட்டவாதியான பி.உதயகுமார். 

அவர் சொல்லுவதில் நியாயமுண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுகிறோம். செடிக் எப்படி ஆரம்பிக்கப்பட்டதோ அப்படித் தான் மித்ராவும் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் செடிக் ஆரம்பிக்கப்பட்ட போது அவர்கள் மீது நமக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.  காரணம் அதில் ஊழல் பெருச்சாளிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்கள்!   அப்பழுக்கற்ற ஒரு தூய மனிதரை அங்கே தலைவராகப் போட்டாலும்  அதனை அபகரித்துக் கொள்ள ம.இ.கா. கொள்ளையர்கள் கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள்!  அதனால் செடிக்கின் கொள்கைகள் எதுவும் நிறைவேறவில்லை! 

தனிப்பட்ட மனிதர்களை விட இயக்கங்கள், மன்றங்கள் என்று செடிக்கின் பணம் தண்ணீராக செலவழிக்கப்பட்டது. இந்தியர்களின் வளர்ச்சிக்காக  கொடுக்கப்பட்ட  கோடிக்கணக்கான பணம் கடைசியில் அரசியல்வாதிகளின் அடுப்பங்கரைகளுக்குச் சென்று சேர்ந்தது!

ஆனால் மித்ராவின் நிலை வேறு.  மித்ரா ஆரம்பிக்கப்பட்ட போது அதன் மீது நமக்கு ஓரு நம்பிக்கை எற்பட்டது.  எதிர்ப்பார்ப்புகள் ஏராளம்.  காரணம் அதில் சம்பந்தப்பட்டவர்கள்  இந்தியர்களின் நலன் மீது அக்கறை உள்ளவர்கள். அவர்களை நாம் நம்பாமல் இருக்க முடியாது. 

என்ன காரணமோ மித்ரா சொல்லும்படியாக செயல்படவில்லை என்று தான் நாம் எண்ண வேண்டியுள்ளது.  மித்ராவிடம் பணம் இல்லை என்று சொல்ல முடியாது. செய்ய வேண்டிய வேலைகளைச் சரியாக செய்யவில்லை!  எங்கோ ஏதோ குறைபாடுகள் உள்ளன என்று நமக்குத்  தெரிகிறது. அதனை  களைய  பிரதமரால் தான் முடியும் என்றும் தோன்றுகிறது.

ஆமாம் அனைத்துப் பிரச்சனைகளையும் பிரதமர் ஒருவரால் தான் முடியும் என்றால் அப்புறம் எதற்கு ஓர் அமைச்சு, ஓர் அமைச்சர், அதிகாரிகள் ....?  இந்தியர்களின் நலனை அறிந்தவர்கள் என்று நாம் எதிர்ப்பார்த்தால்  கடைசியில் இவர்களும் கடைந்தெடுத்த கள்வர்களாக இருப்பார்களோ என்று தானே நாம் நினைக்க வேண்டியுள்ளது!

செடிக் அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ன செய்தார்களோ இவர்களும் அதையே தானே செய்கிறார்கள்.  இவர்களும் இயக்கங்களுக்கும, மன்றங்களுக்கும், அரசு சாரா இயக்கங்களுக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள்> அப்படி என்றால் என்ன அர்த்தம்?  இயக்கங்களுக்குக் கொடுத்தால் 'பின்னால்' நமக்கு உதவும் என்று தானே அர்த்தம்!

இருந்தாலும் அவசரப்பட வேண்டாம். பொறுத்திருப்போம்!

No comments:

Post a Comment