மீண்டும் ம.இ.கா. இந்தியர்களால் வரவேற்கப்படுமா? அதாவது வெளியே இருக்கும் சிலரை உள்ளே இழுப்பதன் மூலம் ம.இ.கா. இந்தியர்களிடையே செல்வாக்கைப் பெற முடியுமா?
முடியாது என்றே நான் நினைக்கிறேன். இது சரியாகவும் இருக்கலாம், சரியில்லாமலும் இருக்கலாம். இன்றைய நிலையில் ம.இ.கா.வால் எந்த செல்வாக்கையும் இந்தியர்களிடையே பெற முடியாது. ஒரு வேளை இன்னும் அறுபது ஆண்டுகள் போனால் அது நடக்கலாம்!
சரி, அப்படியே உடனடியாக நடக்க வேண்டும் என்றால் ம.இ.கா. என்ன செய்ய வேண்டும்?
என்னுடைய ஆலோசனைகளை இதோ கூறுகிறேன்:
இப்போதும் நம் கண் முன்னே நிற்பது மைக்கா ஹோல்டிங்ஸ் தான். மைக்கா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இப்போது வரை அதன் அங்கத்தினர்களுக்குச் சேர வேண்டிய நியாயமான, சட்டப்படி கிடைக்க வேண்டிய இலாபத்தை அவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். இறந்து போனவர்களுக்கு அவர்களின் வாரிசுகளுக்குக் கொடுக்கலாம்
ம.இ.கா. வினரின் மூலம் பல நிலங்களை இந்திய சமுதாயம் இழந்திருக்கிறது. அது கேபிஜே வும் சேர்த்துத் தான் அத்தோடு கடைசியாக பேரா மாநிலத்தின் 2000 ஏக்கர் தமிழ்ப்பள்ளிகளுக்கான நிலம் உட்பட.
இன்னும் பல தில்லுமுல்லுகள் உண்டு. உதாரணத்திற்கு செடிக். ஏம்ஸ்ட் போன்ற கல்லுரிகள். இவைகளைத் திரும்ப இந்திய சமுதாயத்திற்குக் கொடுத்துவிட்டாலே போதும். வேறு தேவை இல்லை. ம.இ.கா. வுக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை தானாகக் கிடைத்துவிடும்.
ம.இ.கா. கட்சி என்பது சாதாரணம்அல்ல. அது கற்பாறையின் மேல் கட்டப்பட்ட ஒரு கோட்டை. ஆனால் சாமிவேலு போகும்போது அதனை வெடி வைத்து சிதறடித்து விட்டுப் போய்விட்டார்! அது தரைமட்டமாகிவிட்டது!
இனி இருப்பவர்களோ அல்லது இனி வரப்போகிறவர்களோ அதனை அப்படியெல்லாம் கட்டி எழுப்பிவிட முடியாது! யார் இருந்தாலும், யார் வந்தாலும் ம.இ.கா.வின் சொத்துக்களின் மீது தான் அவர்கள் கண் இருக்குமே தவிர வேறு நோக்கங்கள் இருக்க முடியாது! இருப்பவர்களோ, வருபவர்களோ அவர்களின் பின்னணியைப் பார்த்தாலே போதும் கட்சியை வைத்துத் தான் அவர்கள் பிழைப்பு நடத்துவார்களே தவிர இந்தியர்களின் பக்கம் அவர்கள் வரவே மாட்டார்கள்!
ம.இ.கா.வை இந்தியர்கள் ஏற்றுக்கொள்ள வலுவான காரணங்கள் எதுவும் இல்லை. பக்கத்தான் அரசில் உள்ள இந்தியத் தலைவர்கள் இப்போது தான் பதவி ஏற்றவர்கள். ஓர் ஆண்டில் அவர்களை மதிப்பிட முடியாது. அவர்களுக்குப் போதுமான நேரம் கொடுக்கப்பட வேண்டும். நிச்சயமாக இங்கும் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். நல்லது செய்வார்கள். அப்படி அவர்கள் செய்யாவிட்டாலும் அவர்களை செய்ய வைக்க இப்போதைய தலைமுறையால் முடியும்.
ம.இ.கா...? இந்திய சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது...!
No comments:
Post a Comment