Friday 10 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (11)

தொழில் நமக்குப் புதிதல்ல!

தொழில் செய்து பிழைப்பது என்பது நமக்குப் புதிதல்ல.

நமது நாடு வளர்ச்சி அடையாத ஆரம்ப காலங்களில் தொழில் வளர்ச்சிக்காக நிதி உதவிகள் கொடுத்து வியாபாரிகளை உயர்த்திவிட்டவர்கள் நமது செட்டியார் சமுகத்தினர் தான்.

அப்போதெல்லாம்ஆங்காங்கே ஒரு சில வங்கிகளே இருந்து வந்தன. அவைகள் எல்லாம் அவ்வளவு எளிதில் யாருக்கும் கடன் கொடுப்பதில்லை.

நமது செட்டியார்கள் தான் வங்கிகளாக செயல்பட்டனர். அப்போது நமது சமூகத்தினர் பலர் பலவித தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். 

இப்போதும் கூட சிறிய நகரங்களிலோ, பெரிய நகரங்களிலோ நமது சமூகத்தினர் தொழில் செய்ததற்கான அடையாளங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒவ்வொரு நகர்த்திலும் ஓரிரெண்டு 'லிட்டல் இந்தியா' இருந்த அடையாளங்கள் இன்னும் இருக்கின்றன.

செட்டியார்களிடம் கடன் வாங்கி தொழில்களை ஆரம்பித்த சீனர்கள் தங்களது தொழில்களில் அசுர வேகத்தில்  ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர்.  அப்போதிருந்த அரசியலும் அவர்களுக்குச் சாதகமாக இருந்ததால் நம் தொழில்கள் அனைத்தும் முடங்கி விட்டன!

பரவாயில்லை!  இவைகளெல்லாம் நமக்குப் பாடங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய  விஷயம் தொழில் என்பது நமக்குப் புதிதல்ல என்பதுதான்.

இழ்ந்துவிட்டோம்.  இழந்துவிட்டவைகளை மீண்டும் நாம் மீட்டெடுக்க வேண்டும். ஒரே நிபந்தனை. நாம் அனைவரும் தொழில் துறைகளில் ஈடுபட முயற்சி செய்ய வேண்டும்.  நாம் செய்கின்ற தொழில்களையும் நமது வாரிசுகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும். சிறிய தொழில்களையும் பெரிய தொழில்களாக மாற்றக் கூடிய சக்தி அவர்களுக்குண்டு.

இப்போதெல்லாம் நம்பிக்கை தரும் ஒரு சில விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.  தந்தை மூன்று லோரிகளை வைத்து தொழில் செய்து வந்தார். பட்டப்படிப்பு படித்துவிட்டு வந்த தனையன் அதனை பதினைந்து லோரிகளாக்கி வேறு புதிய தொழில்களிலும் ஈடுபட்டு விட்டார்.   தந்தை பாதுகாப்பு நிறுவனம் நடத்தி வந்தார். தீடீரென அவர் மரணமடைந்தார்.  பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த அவரது மகள் இப்போது அந்த நிறுவனத்தை தானே நடத்திக் கொண்டிருக்கிறார்.

இவர்களெல்லாம் நமக்கு நம்பிக்கை தரும் எதிர்காலங்கள்!

தொழில் உலகம் நமக்குப் புதிதல்ல!  தேவை அதற்கான ஆர்வம்! ஈடுபாடு மட்டுமே!

No comments:

Post a Comment