Thursday 9 January 2020

இந்தியாவின் முதல் வாக்காளர்!


                                              ஷியாம் சரண் நேகி                        

சுதந்திர இந்தியாவில் 1951 -ம் ஆண்டு நடைபெற்ற  பொதுத் தேர்தலில் முதல் வாக்காளராக, தனது வாக்கைப் பதிவு செய்தவர் ஷியாம் சரண் நேகி.

ஷியாம்,  இமாலயப் பிரதேசம், கல்பா என்னும் ஊரில் 1917 - ம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி பிறந்தவர். (1.7.1917)  அவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்தியா 1947 - ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் நடந்த முதல் இந்தியப் பொதுத் தேர்தலில்  - 1951 - ஆண்டு, அக்டோபர் மாதம் 25-ம் தேதி - இந்தியாவின் முதல் வாக்கைப் பதிவு செய்தவர் ஷியாம். 1951 - ம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற அனைத்து இந்தியப் பொதுத் தேர்தல்களிலும் அவர் வாக்களித்து வந்திருக்கிறார். முதல் வாக்காளர் என்னும் முறையில் அவருக்கு ஓர் இந்தி படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது!

ஷியாமுக்கு இப்போது 103 வயதாகிறது. முதுமையின் காரணமாக இப்போது அவர் உடல் நலம் குன்றி மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மாநில முதலமைச்சர் ஷியாமுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி சுகாதாரத் துறைக்கு உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

ஷியாம் சரண் நேகி  நீண்ட நாள் வாழ நாமும் இறைவனைப் பிரார்த்திப்போம்!

No comments:

Post a Comment