Wednesday 8 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (9)


முடியும் என்று நினையுங்கள்

தொழில் செய்து  பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ளவேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டால் அப்புறம் பின் வாங்காதீர்கள். 

பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள தொழில் செய்வதே சிறந்த வழி. இல்லாவிட்டால் சீனர்கள் ஏன் தொழிலை நோக்கியே தங்களது கவனத்தைச் செலுத்துகிறார்கள் என்பதை கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

'தொழில் செய்யலாமா?' என்று எந்த ஒரு சீனரிடமும் ஆலோசனையோ அல்லது அறிவுரையோ கேட்காதீர்கள். அவர்களைப் பொறுத்தவரை சீனர்கள் மட்டுமே தொழில் செய்ய வேண்டும் மற்றவர்கள் தங்களிடாம் அடிமைகளாக வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்! அவர்கள் அப்படித்தான் உருவாக்கப்பட்டவர்கள்! அவர்களுடைய எண்ணங்கள் எல்லாம் சீனர்கள் மட்டுமே பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்! மற்ற இனத்தவர்கள் வருவதை அவர்கள் விரும்புவதில்லை!

அப்படியே நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டு விட்டால் அவர்களின் பதில் எப்படி இருக்கும்?  முதலில்:  தொழில் செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம்! என்பார்கள். ரொம்ப பிரச்சனை! என்பார்கள். அரசாங்கம் அப்படி செய்கிறது, இப்படி செய்கிறது! என்று குற்றம் சாட்டுவார்கள்.  அதாவது அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் உங்களால் முடியாது! என்பது தான் அதன் சுருக்கம்!  இவ்வளவு கஷ்டம் என்று சொல்லுபவர்கள் தொழிலை விட்டு  அவர்கள் ஓடிவிட்டார்களா? அது மட்டும் நடக்காது!

ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். அவர்களின் ஆரம்ப காலத்தில் தொழில் செய்ய வங்கிகள் கடன் கொடுக்கவில்லை. நமது இன செட்டியார்கள் தான் அவர்களின் உயர்வுக்கு ஏணியாக இருந்தார்கள்! ஆக, நாம் தான் அவர்களுக்கு உதவினோம்.  செட்டியார்களிடம் பணம் கடன் வாங்கிய நேரம் சீனர்களுக்கு அது நல்ல  நேரமாக அமைந்து விட்டது! இன்று வரை அவர்களுக்கு ஏற்றம் தான்!

அதே ஆரம்ப காலத்திலிருந்து, சீனர்களுக்கு முன்பே - யார் தொழில் செய்து வந்தார்கள்? நமது செட்டியார்கள், நமது தமிழ் முஸ்லிம்கள், நமது குஜாராத்தி சகோதரர்கள் - இப்படித்தான் அந்த வரிசை அமைந்திருந்தது.

ஆக, தொழில் நமக்குப் புதிதல்ல. ஆனால் எண்ணத்தில் மாற்றம் வேண்டும். நம்மால் முடியும்  என்பதை மனத்தில் பதிய வைக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களை எடுத்து எறிய வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் உடையோரை நாம் பேச அனுமதிக்கக் கூடாது. அவர்களுடன் சேர்வதை தவிர்க்க வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக நம்மால் முடியும் என்று நம்ப வேண்டும்!

முடியும்! முடியும்!


No comments:

Post a Comment