Friday 31 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! ( 32)

நாமும் பின்பற்றலாம்!

கூடைப்பந்து விளையாட்டில் கொடிகட்டிப் பறந்தவர். ஓர் அமெரிக்கரான, கோபே பிரியண்ட்.

இவர் சமீபத்தில்   ஒரு விமான விபத்தில் கொல்லப்பட்டார். கூடவே பயனம் செய்த அவர்து மகளும் அந்த விபத்தில் கொல்லப்பட்டார் என்பதாக் அந்த துக்கச் செய்தியை நாம் பத்திரிக்கைகளில் கண்டோம்.

ஆனால் நாம் அது பற்றி ஒன்றும் பேசப்போவது இல்லை.

அவர் தொழில் முனைவோருக்கு நல்லதொரு பாடமாக இருந்தார் என்பது தான் நாம் இங்கே காணப்போவது. கூடைப்பந்து போட்டிகளிலிருந்து அவர் ஓய்வு பெற்ற பின்னர் அவர் வியாபாரத் துறையில் காலடி எடுத்து வைத்தார். அவர் தேந்தெடுத்த துறை அனைத்தும் விளையாட்டுத் துறை சம்பந்தமானது. 

அவர் சார்ந்த ஒரு துறையைத் தேர்ந்து எடுத்தது தான் அவரின் முதல் வெற்றி. விளையாட்டுத் துறை அவரது பலம். அதனை விளாவாரியாக அறிந்தவர் அவர்.

அதைவிட இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். விளையாட்டுத் துறை அவரது பலமாக இருந்தாலும், அந்தத் துறையில் ஜாம்பவானாக இருந்தாலும் அடுத்து அவர் செய்த காரியம் தான் மிகவும் போற்றத்தக்கது. 

"அவர் வணிகத்துறையில் இறங்குவதற்கு முன்னர் வணிகத்துறை குறித்துப் பல நூல்களைப் படித்துத் தெரிந்து கொண்டார். அத்தோடு காணொளி மூலம் பல தகவல்களையும், பல உரைகளையும் கேட்டு தனது வணிக அறிவையும் வளர்த்துக் கொண்டார்." 

நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  கோபே தொழிலை ஆரம்பிக்கும் முன்னேரே விளையாட்டுத் துறையில் நிறையவே சம்பாதித்திருக்கிறார்.  அதாவது கோடி கோடியாக சம்பாதித்தவர். தன்னிடம் பணம் இருக்கிறது என்பதற்காக அவர் யாரையோ நம்பி அவர் தொழிலுக்கு வரவில்லை. தொழிலுக்கு வரும் போது தனக்கு இருக்கும் அரைகுறை அறிவே போதும் என்று அவர் நினைக்கவில்லை. 

தொழிலைப் பற்றி தனக்குப் போதுமான அறிவு இருக்க வேண்டும் என்று நினைத்து அது பற்றியான தனது அறிவை வளர்த்துக் கொண்டார்.  அது தான் முக்கியம். அதனால் தான் தொழில் உலகில் அவர் பெரிய வர்த்தகராக உலக அளவில் வலம் வந்து கொண்டிருந்தார்.

இங்கு நாம் சொல்லுவது எல்லாம் வர்த்தகத் துறைக்குப் புதியவரோ, பழையவரோ நீங்கள் உங்க துறை சம்பந்தமான அறிவை  வளர்த்துக் கொள்ளுங்கள் என்பது தான். கோடிசுவரரான கோபே தனக்குத் தொழில் அறிவு தேவை என்று நினைக்கும் போது  உங்களுக்கும் எனக்கும் தேவை இல்லாமலா போகும்!

No comments:

Post a Comment