Tuesday 14 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (15)


நினைத்தால் விடுமுறை?

தொழில் ஈடுபட்டிருப்பவர்கள் நினைத்தால் விடுமுறை எடுக்கலாமா? 

உண்மையைச் சொன்னால் அதெல்லாம் சாதாரண விஷயமல்ல.  விடுமுறை எடுப்பது சுலபமான காரியம் அல்ல. ரொம்பவும் ஆபத்து  ஆவசரம் என்றால் மட்டுமே விடுமுறை போட முடியும். அதுவும் சம்பளமில்லா விடுமுறை! சம்பளமில்லா விடுமுறையை யார் விரும்புவார்?

அனைத்துத் துறையிலும் போட்டிகள் என்று வந்து விட்ட பிறகு விடுமுறை எடுப்பது அவ்வளவு சுலபமா, என்ன?  எனக்குத் தெரிந்த சீனர் ஒருவர் சீனப்புத்தாண்டு கொண்டாடப்படும் நாள்களில் கூட வியாபாரம் செய்து கொண்டிருப்பார்!  கேட்டால் "அதெல்லாம் இளைஞருக்குத் தானே!"  என்பார்!

சொந்த வியாபாரம் செய்வர் பலர் விடுமுறை எடுப்பது குதிரைக் கொம்பு என்பார்களே அது தான் உண்மை! அதனால் தான் இப்போதெல்லாம் பெரும்பாலோர் பெருநாள் காலங்களில் நீண்ட விடுமுறைகளை எடுத்து விடுகின்றனர். ஒரு வாரம், இரண்டு வாரம் என்று வெளி நாடுகளுக்குப் பறந்து விடுகின்றனர்!

விடுமுறை என்பது தேவை தான்.  எப்போதும் மன இறுக்கத்தோடு வாழ்பவர்களுக்கு அவ்வப்போது ஓய்வு தேவை என்பதில் ஐயமில்லை. வார விடுமுறையும் தேவை தான்.

ஆனால் தொழில் செய்பவர்கள்  'நினைத்தால் கடையை அடைத்துவிட்டு போகலாம்' என்று சொல்லுவது சரியாக வராது!  அப்படியெல்லாம் செய்யவும் முடியாது.

காரணம் வியாபாரம் என்பது வியாபாரம் செய்கின்றவரின் குடும்பம் மட்டும் அல்ல.  அந்த வியாபாரங்களை நம்பி  பல குடும்பங்கள்   இருக்கின்றன.

சாதாரணமாக வாடிக்கையாளர்கள் தங்களது வியாபாரிகளை மாற்றிக் கொள்வதில்லை.  தினசரி எந்த கடைகளில் தங்களது பொருள்களை வாங்குகிறார்களோ அங்கே தான் தொடர்ந்து அவர்கள் தங்களது பொருள்களை வாங்குவார்கள்.  காரணங்கள் பல உண்டு.  

அதனால் நினைத்தால் கடையை மூடுவேன்; விடுமுறை போடுவேன் என்பதெல்லாம் இயலாத காரியம்!

அவசியம் என்றால் மட்டுமே விடுமுறை!

No comments:

Post a Comment