Thursday, 11 June 2020

நடவடிக்கை எடுக்க முடியாது!

ஸம்ரி வினோத்  மீண்டும்  சர்ச்சையில் மாட்டியிருக்கிறார்!

சர்ச்சை என்பது அவருக்கு ஒன்றும் புதிதல்ல. அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தொழிலே சர்ச்சையை ஏற்படுத்துவது தான்! அதை அவர் வெற்றிகரமாக செய்து கொண்டு வருகிறார்.

அவர் செய்து கொண்டு வருகிற சர்ச்சையினால், நம் நாட்டில்,  அவருக்கு எந்த ஆபத்தும் வராது என்பதை அவர் புரிந்து வைத்திருக்கிறார். அவரது குருவான ஜாகிர் நாயக்கும் அதனை அறிந்தவர்.

எத்தனை போலீஸ்புகார்கள் - இதுவரை 800 புகார்கள் என அறிகிறேன் - செய்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்காது என்பதும் நமக்குப் புதிதல்ல.

கொஞ்சம் பின்னோக்கிப் பாருங்கள். நஜிப் பிரதமராக இருந்த காலத்தில், மகாதிர் சிறிது காலம் பிரதமராக இருந்த காலத்தில் ஏன் இப்போது முகைதீன் பிரதமராக இருக்கின்ற காலத்தில் - எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே போதும் ஸம்ரி எவ்வளவு உயரத்தில் இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்! அந்த உயரம் அவருக்கும் ஜாகிர் நாயக்கிற்கும் மட்டும் தான்! வேறு யாருக்கும் இல்லை!

அதற்காக புகார் தேவையில்லையா என்று கேட்கலாம். இல்லை புகார்கள் தொடர்ந்து செய்தாக வேண்டும். காவல்துறை இன்னும் உயிரோடு தான் இருக்கிறது என்பதற்கு இந்த புகார்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளுகிறார்களே அது தான் அத்தாட்சி!

அவரது அறிவு, ஆற்றல், நிபுணத்துவம் அனைத்தும் இங்கு தான் செல்லுபடியாகும் என்பதையும் ஸம்ரி அறிந்து வைத்திருக்கிறார்! வேறு எந்த நாட்டிலும் அவரது அறிவு செல்லுபடியாகாது! ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கெல்லாம் அவர் சென்று வாயைத் திறக்க முடியாது! ஏன் அவர் குருவும் கூட அடங்கி விடுவார்! அந்நாடுகளிலுல்ல காவல்துறையினருக்கு தரசியல் தலையீடு இல்லை! அது போதும்! அதை இங்கு நாம் எதிர்ப்பார்க்க முடியாது!

எப்படியோ மதத்தின் பெயரால் குடும்பத்தை நடத்துபவர் ஸம்ரி வினோத்  அவருக்கு எந்த குறையும் இல்லை. அதே போல அவரது குருவுக்கும் எந்த குறையும் இல்லை!

குடும்பம் நன்றாக நடந்தால் யாரையும் எதனையும் எதிர்க்கலாம் என்கிற கொள்கை உடையவர்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.  அதுவும் அறிவு குறைபாடு உள்ளவர்களின் உளரல்கள்!

காவல்துறை இன்னும் காலாவதியாகிவிடவில்லை!

No comments:

Post a Comment