Monday 15 June 2020

இது தான் மாத்தி யோசி என்பது!

இன்று நமது இளைஞர்கள் மாற்றி யோசிக்க ஆரம்பித்தார்களானால் எதுவும் சாத்தியமே!


அப்படி ஒரு சாதனையைச் செய்து காட்டியிருக்கிறார் முருகபூபதி என்கிற இளைஞர்.

இந்தியா, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த முருகபூபதி ஒரு  பட்டதாரி இளைஞர்.  புதுச்சேரி, காரைக்காலில் உள்ள தனது பேட்டை என்னும் கிராமத்தில் ஓர் அசாத்தியமான செயலை செய்து காட்டியிருக்கிறார் அவர்.

தனது சொந்த நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் அவருக்கு   சிறு வயது முதலே விவசாயத்தில் அதிக ஈடுபாடு உண்டு.  தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகும் தனது நிலத்தில் விவசாயம் செய்வதை அவர் விட்டு விடவில்லை.

அண்மையில் தனது நிலத்தில் இயற்கை முறையில் கத்திரிக்காய் சாகுபடியில் அதிகக் கவனம் செலுத்தி முழுமூச்சாக அதில் ஈடுபட்டிருந்தார்.  அதன் காரணமாக அதிகமான விளைச்சல் ஏற்பட்டது. 

மகிழ்ச்சி தான் என்றாலும் கொரொனா தொற்று ஏற்பட்டதால் அனைத்தும் பாழாகும் நிலை ஏற்பட்டது.  ஊரடங்கு கடைப்பிடிகப்பட்டதால் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டது. குறைவான விலையில் கத்திரிக்காய் விலைப் பேசப்பட்டது. அத்தனையும் நஷ்டம்.

இந்த நேரத்தில் தான் விவசாயிகளில் பலர் தங்களது விலைப்போகா கத்திரிக்காய்களையும், காய்கறிகளையும் வீதிகளில் எறிந்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். 

முருகபூபதி கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்தார். அதன் பயன்: கத்திரிக்காய்களைக் காயவைத்து அதனை வற்றலாக மாற்றியமைத்து அதன் விலையைக் கூட்டி உள் நாட்டில் விற்பனையைத் தொடங்கி விட்டார்! இப்போது வெளி நாடுகளிலும் ஏற்றுமதி செய்யும் பணிகளில் கவனத்தைத் திருப்பியிருக்கிறார். 

காலங்காலமாக விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு ஒரே மாதிரியான சிந்தனை. அதிலிருந்து அவர்களால் விடுபட முடியவில்லை. கோபத்தைத் தான் காட்ட முடிகிறது. புதிய, படித்த நவீன விவசாயம் செய்யும் இளைஞர்கள் சிந்தனைகளில் மாற்றம் தெரிகிறது.

ஒரு வழி அடைக்கப்பட்டால் அடுத்த வழி என்ன என்கிற தேடல் அவர்களிடம் இருக்கிறது/

முருகபூபதி போன்ற இளைஞர்களை நாம் பாராட்டுவோம். எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு உண்டு என நம்புவோம்.

தேவை என்றால் மாற்றி யோசிப்போம்! யோசிப்பதை செயல் படுத்துவோம்!

No comments:

Post a Comment