Thursday 25 June 2020

மீண்டும் ஒரு தொழிற்சாலை மூடப்பட்டது!


சமீபத்தில், ஒரு சில நாள்களுக்கு முன்பு தான், தவ்வு  (Tofu) தொழிற்சாலை ஒன்று மூடப்பட்டதாக செய்திகளைக் கண்டோம்.

இப்போது  கோலாலம்பூர் மாநகர் மன்றம் மீண்டும் கிளர்ந்து எழுந்திருக்கிறது! மாநகர் மன்றத்தினர் தினசரி வேலை செய்பவர்களா அல்லது ஆண்டுக்கு ஒரு முறை வேலை செய்பவர்களா என்று தெரியவில்லை!

மக்கள் சாப்பிடும் உணவுகள் எப்படி எல்லாம் தயாரிக்கப்படுகின்றன என்று கொஞ்சம் ஆராய்ந்தால் நாம் நிச்சயமாக சாப்பிடுவதையே மறந்து விடுவோம்!

இப்போது மாநகர் மன்றத்தால் மூடப்பட்டிருக்கும் மீ (Noodles) தொழிற்சாலை ஜாலான் செகாம்புட்டில் உள்ளது. முன்பே என்ன காரணிகளைச் சொன்னார்களோ அதே காரணிகள் தான் இப்போதும்!

தொழிற்சாலை மிகவும் அசுத்தம் என்கிற சூழலில் மூடப்பட்டிருக்கின்றது.  எலிகளின் நடமாட்டமும் அதன் கழிவுகளும் பரவலாகக் காணப்பட்டது. எலிகளின் மூத்திரம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இருக்கலாம்! நாம் எவ்வளவு தூய்மையற்ற உணவுகளை உண்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவர்களின் கழிப்பிடம் மிகவும் அசுத்தமாக இருந்தது.  தொழிற்சாலையின் சுவர்கள், தரைகள் அனைத்தும் கருமை அடைந்து பார்ப்பதற்கு அருவருப்பைக் கொடுத்தது.  மீ தயாரிக்கப் பயன்படுத்தும் தளவாடங்கள் அனைத்தும் மிகப் பழையவை. மீ  தயாரிப்பதற்கு ஏற்றவை அல்ல.

தொழிற்சாலையில் பணி புரியும் வெளி நாட்டுத் தொழிலாளர்கள் மேலங்கியோ , தலையங்கியோ  எதுவும் அணிந்திருக்கவில்லை. தொழிலாளர்களுக்கு அரசாங்க உத்தரவின்படி எந்த தடுப்பு ஊசிகளும் போடப்படவில்லை. அத்தோடு கோரோனா தொற்று நோயிக்கான சோதனைகளும் செய்யப்படவில்லை!

நம்முடைய குற்றச்சாட்டு: உணவுப் பொருள்களைப் தயாரிக்கும் தொழிற்சாலைகளை மாநகர் மன்றம் சரிவர கண்காணிப்பதில்லை! மாநகர் மன்றமே இப்படி என்றால் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள தொழிற்சாலைகளின் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் :நெஞ்சம் பொறுக்குதில்லையே!"  என்று பாடத் தோன்றுகிறது!

ஒரு வேண்டுகோள்! உணவு தயாரிக்கும் ஒவ்வொரு தொழிற்சாலையும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது சோதனைகளைகளுக்கு உட்படுத்த வேண்டும்.

அதுவே நமது வேண்டுகோள்!

No comments:

Post a Comment