Friday 12 June 2020

இன்னும் ஒரு சில வாரங்களுக்கு....!

நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக அரசாங்கம் கூறுகிறது.

நமக்கும் மகிழ்ச்சி தான். எவ்வளவு நாள்களுக்குத் தான் உள்ளேயே அடைந்து கிடப்பது?  இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு விட முடிகிறது!

இருந்தாலும் நம்மிடையே  சில கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. அரசாங்கம் தடுமாறுகிறதா அல்லது நாம் தான் தடுமாறுகிறோமா, அது தான் புரியவில்லை!

இனி பேருந்துகள் அனைத்தும் எப்போதும் போல இயங்கலாம் என்று சொல்லுகிறார்கள்.  இடை வெளியைப் பின்பற்றினால் அவர்களுக்கு நட்டம் என்பது நமக்கும் புரிகிறது. விமான இயக்கமும் அது போலத்தான்.

இனி கூட்டங்கள் நடத்தலாம். வகுப்புக்கள் நடத்தலாம். கருத்தரங்குகள் நடத்தலாம். பயிலரங்குகள் நடத்தலாம். இரவு நேர சந்தைகள் நடத்தலாம். உணவகங்கள் நடத்தலாம்.இப்படி எல்லாமே ......லாம்! ......லாம்! ..........லாம்! 

எல்லாமே மக்களின் நன்மைக்குத் தான்.  இல்லை என்று சொல்ல முடியாது. 

ஆனால் இன்னும் நடைமுறை கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் என்று சொல்லுவது தான் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

பொது போக்குவரத்துகளுக்கு அனுமதி கொடுத்து விட்டாலே அப்புறம் பேசுவதற்கு எதுவுமில்லை.  பேரூந்தகளில் பயணம் செய்பவர்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அவர்களைச் சோதனை செய்ய முடியாது. வாடகைக் கார்களுக்கும் அதே நிலை தான்.

முடிதிருத்தகங்கள் பற்றி ஒருவர் கேளவி எழுப்பியுள்ளார். முடிதிருத்தனர் தொற்று உள்ளவரா என்பது எப்படி உறுதி செய்வது? அதுவும் முக்கியமான கேள்வி தான்.

எப்படி இருந்தாலும் ஒவ்வொரு துறையும் "திறந்து" விடும் போது தான் நமக்குப் புதிய புதிய கேள்விகள் எழும்!  கேள்விகள் எழும் போது தான் அதற்கான தீர்வுகளும் கிடைக்கும். இது தான் அனுபவம் கொடுக்கும் பாடம் என்பது.

ஆனாலும் இதில் பொது மக்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவைகளை அறிந்து அரசாங்கத்தோடு ஒத்துழையுங்கள். மக்கள் நெருக்கம் உள்ள இடங்களில் குழந்தைகள்,வயதானவர்கள் போவதைத் தவிர்க்க வேண்டும்.

அரசாங்கம் என்ன தான் பல தளர்ச்சிகளை அறிவித்திருந்தாலும் கொரோனா தொற்று இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. இன்னும் ஒரு சில வாரங்களில் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என நம்புவோம்.

அது வரையில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்போம்!

 

No comments:

Post a Comment