Sunday 14 June 2020

மீண்டும் டாக்டர் மகாதிரா..?

மீண்டும் அரசாங்கம் பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் கைக்கு வருமானால் அப்போது யார் பிரதமராக வரக்கூடும்?

இப்போது இந்தக் கேள்வி தேவைதானா என்று தோன்றலாம். தேவை  என்பது தான் எனது அபிப்பிராயம். காரணிகளை அலசும் போது இப்படி ஒரு கேள்வி எழுவதில் ஆச்சரியமில்லை. 

இன்றைய அரசாங்கத்தின் அடித்தளம் அப்படி ஒன்றும் பலமாக இல்லை.

ஒன்று சொல்லலாம்.  இது கோரோனா தொற்று நோய் காலம். இந்தத் தொற்று அரசாங்கத்திற்கு தனது ஆயிளை நீடிக்க தோதாக அமைந்துவிட்டது! கொரோனா பல மலேசியர்களைப் பலி வாங்கினாலும் இன்றைய அரசாங்கத்தைப் பலி வாங்கவில்லை! அது வரையில் பிரதமர் முகைதீன் குழுவினர் மகிழ்ச்சி அடையலாம்!

அப்படி இந்த அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால் ....?  கவிழாது என்று சொல்லுவதற்கில்லை!  அப்படி யாரும் உத்தமபுத்திரர்கள் அரசாங்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை!

எல்லாருமே பணம்,  பதவி என்றால் அடிமையிலும் அடிமையாக அனைத்தையும் இழக்கத் தயாராக இருப்பவர்கள்! மானம், மரியாதைப் பற்றி அவர்களுக்கு எந்த அபிப்பிராயமும்  இல்லை!

இவர்களோடு ஒப்பிடுகையில் டாக்டர் மகாதிர் இன்னும் உயர்வாகத்தான் தென்படுகிறார். அனைத்து மலேசியர்களும் ஆதரிக்கும் தலைவராகத்தான் இன்றும் அவர் உயர்ந்து நிற்கிறார். அடிமட்ட மலாய்க்காரரிடையே அவர் செல்வாக்கு மிகுந்தவராகத்தான் இன்னும்  வலம் வந்து கொண்டிருக்கிறார். 

அப்படி அரசாங்கம் கவிழும் என்றால் அடுத்த பிரதமராக அன்வார் இப்ராகிம் வருவதற்கு என்ன தடை உள்ளது? ஒன்று: டாக்டர் மகாதிரை வைத்துத்தான் தரசாங்கம் அமைக்க முடியும். இன்றைய நிலையில் வேறு யாரும் பிரதமராக வர முடியாது என்பது உண்மையிலும் உண்மை!

முதலில் டாக்டர் மகாதிர் தலைமையலான அரசாங்கத்தை அமைத்த பின்னர் ஆறு மாதங்கள் கழித்து பிரதமர் பதவியை அன்வார் இப்ராகிடம் ஒப்படைக்கலாம்.  அது தான் சாத்தியம். வேறு ஏதேனும் வழிகள் இருப்பதாகத் தோன்றவில்லை.

இவர்கள் இருவரும் - டாக்டர் மகாதிர், அன்வார் இப்ராகிம் - ஒரு முடிவுக்கு வராத வரை இன்றைய நடப்பு அரசாங்கம் தலை நிமிர்ந்து நிற்கவே செய்யும்! அவர்களை எதிர்ப்பார் யாருமில்லை என்கிற மமதை அவர்களுக்கு எழவே செய்யும்!  அது தானே உண்மை?

இப்போது என்ன செய்ய வேண்டும்? எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும். அது நடப்பதும் ஓர் அதிசயம் தான். அந்த அதிசயம் நடக்காத வரை முகைதீன் தலைமையலான அரசாங்கம் தொடரவே செய்யும்!

நமக்கு அதில் ஆட்சேபணை இல்லை! யார் வந்தாலும் நமது நிலை இப்படியே தான் இருக்கப் போகிறது!

நாம் அரசாங்கத்தை நம்பவில்லை எங்களைத்தான் நம்புகிறோம்!

No comments:

Post a Comment