Saturday 27 June 2020

மொகிதினூக்கு ஆதரவாக .....!

பிரதமர் மொகிதீனுக்கு,  வருகின்ற நாடாளுமன்ற கூட்டம் ஜூலை 13-ம் தேதி கூடும் போது,  பாஸ் கட்சி தனது ஆதரவைத் தெரிவிக்கும் என பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளார் அறிவித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

நல்ல செய்தி தான். வரவேற்கிறேன்.  என்னைக் கேட்டால் நாடு இப்போதுள்ள நிலைமையில் ஒரு தேர்தலை நடுத்துவதால் நாட்டுக்கு எந்த நன்மையும் வந்து சேரப் போவதில்லை!

அம்னோ தரப்பினர் இப்போது தேர்தலை வைத்தால் தங்கள் தரப்புக்குச் சாதகமாக இருக்கும் என நம்புகின்றனர்.  அந்த ஒரு கட்சிக்குச் சாதகமாக இருக்கும் என்பதற்காக தேர்தலை நடத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது!

இப்போது மக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றால் நிச்சயமாக பதினைந்தாவது தேர்தல் வரும் போது அவர்களைத்தான் மக்கள் ஆதரிப்பார்கள். அதுவரையில் ஏன் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது?

அம்னோ கட்சியினர் ஆட்சியிலிருக்கும் போது நாட்டையே கொள்ளையடித்தவர்கள் என்பதாகப் பெயர் பெற்றவர்கள்! அதனால் என்ன?  சமீபத்தில் நடைப்பெற்ற இடைத் தேர்தல்களில் மக்கள் அவர்களுக்குத் தானே வெற்றி பெற ஆதரவு கொடுத்தார்கள்! அப்படியென்றால் மக்கள்  தொடர்ந்து அவர்களுக்கு தானே ஆதரவு கொடுக்கப் போகிறார்கள்.

இப்போது இருக்கும் அரசாங்கம் அம்னோவுக்கு ஆதரவாகத் தானே செயல்படுகிறது! அதிலென்ன சந்தேகம்.  உயர்பதவிகளில் மலாய்க்காரர்கள் தானே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.  ம.இ.கா. வுக்கு ஒர் அமைச்சர் பதவி தானே கொடுக்கப்பட்டிருக்கிறது!  இதெல்லாம் அம்னோவுக்குச் சாதகம் தானே!

எப்படிப் பார்த்தாலும் அனைத்தும் அம்னோவுக்குச் சாதகமாகத் தான் இருக்கிறது! 

இன்றைய நிலையில்  பாஸ்  கட்சியின் கை ஓங்கியிருப்பது  அம்னோவுக்குப் பிடிக்கவில்லை என்று தான் நினைக்க வேண்டியுள்ளது! அமைச்சரவையில் அதிக இடம், அரசு சார்பு நிறுவனங்களில் அதிக இடம் - இது நிச்சயமாக அம்னோவுக்கு நல்ல செய்தி இல்லை!

ஆனால் பாஸ் கட்சியினருக்கு அது நல்ல செய்தி. பாவம்! பாஸ் கட்சியினர் பதவிக்காக காய்ந்து கிடந்தவர்கள். இப்போது தான் அவ்ர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. 

இந்த நேரத்தில் தேர்தல் வேண்டும் என்றால் அவர்கள் - பாஸ் கட்சியினர் -  வரவேற்க மாட்டார்கள்!  அடுத்த தேர்தல் வரை பொறுத்திருந்தால் அதற்குள் அவர்கள் பங்கிற்கு அவர்களது பதவிகள் உதவியாக இருக்கும்!

எந்த காரணத்திற்காக பாஸ் கட்சியினர் நடப்பு அரசாங்கத்தை ஆதரித்தாலும்  பொதுத் தேர்தல் வேண்டாம் என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதாக நம்பலாம்.

ஆனால் இது அரசியல்! எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம்! அரசியலில் உத்தமர்களை எதிர்ப்பார்க்க முடியாது!

No comments:

Post a Comment