Wednesday 24 June 2020

ஏன்? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!

                              "வீரத் தமிழச்சி"   ஜல்லிக்கட்டு ஜூலி                          

 எனது முகநூலில் வருகின்ற ஒரு சில விஷயங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை! ஜீரணிக்க முடியவில்லை என்று சொல்லலாம்!

தொடர்ந்தாற் போல அவை வருகின்றன! இதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது எனக்குப் புரியாத புதிராகவே இருக்கின்றது.

விஷயத்திற்கு வருகிறேன்.  முன்னாள் விஜய் டிவி, சுப்பர் சிங்கர் பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற ஒருவர் பிரியங்கா. வெற்றி பெற்றதில் நமக்கும் மகிழ்ச்சியே!  இப்போது தொடர்ந்து அவர் முக நூலில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.

அதன் பின்னர் இன்னொரு வெற்றியாளர் பார்வதி.  பார்வதியும் அவர் பங்குக்கு தொடர்ச்சியாக முகநூலில் வந்து கொண்டிருக்கிறார்!

மேலே சொன்ன இருவரும் வெற்றிப் பெற்று  அதற்கான பரிசுகளையும் பெற்றுக் கொண்டார்கள். நாமும் அவர்களை மறந்து விட்டோம்.

இன்னொருவரும் தொடார்ந்தாற் போல வந்து கொண்டிருக்கிறார். அவர் நடிகை நயன்தாரா! இவர் வருவது நமக்கு ஆச்சரியம் அளிக்கிறது! அவர் தமிழ்ப்படவுலகில் பிரபலமான நடிகை. அவருக்கு அறிமுகம் தேவை இல்லை. நடிகைகளின் நேரங்காலம் சரியில்லை என்றால் அவர்களே மூட்டை முடிச்சுகளுடன் புறப்புட்டு விடுவார்கள்!

இந்த மூன்று பேருமே கேரள - மலையாள இனத்தவர்கள்.  இது போன்ற விளம்பரங்களின் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? தமிழர்களிடையே ஆதரவு தேட வருகிறார்கள் என்று சொல்லலாமா? தமிழர்கள் யாரும் இப்படிச் செய்வது இல்லையே!

இதற்கு முன்னர் நடந்த ஒன்றையும் விளக்க வேண்டும்.  கேரள வருகை நடிகை ஓவியா கோலிவூட் நுழைய முயற்சி செய்த நேரம். வரும்போதே ஆரவாரத்துடன் தனது அரை-குறை படங்களை வெளியாக்கி தன்னை பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில்"வீரத்தமிழச்சி" என்று போற்றப்பட்ட ஜூலியும் உள்ளே நுழைந்தார். "நான் தமிழச்சி'டா"  என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அவர் சொன்ன ஒரே வார்த்தையை வைத்து ஜூலியைத் தண்டிக்கும் விதமாக ஊடகங்கள் அனைத்தும் அவரை எதிரியாகப் பார்த்தனர். ஓவியாவை தூக்கி வைத்துப் பேசிய அவர்கள் ஜுலியை மட்டமாகப் பேசினர். 

ஜூலி இத்தனைக்கும் தமிழ் மண்ணைச் சார்ந்தவர்.  அவர் ஆந்திராவிலிருந்தோ, கர்நாடகாவிலிருந்தோ,  கேரளாவிலிருந்தோ அடிபட்டோ, உதைப்பட்டோ தமிழ் மண்ணுக்கு வந்தவர் அல்ல! அவர் தமிழ் மண்ணின் சொந்தம்.  ஆனால் ஊடகத் துறையினர் கவர்ச்சியாட்டம் போட்ட ஓவியாவுக்கோ ஓர் ஆர்மியையே உருவாக்கிவிட்டனர்! ஜூலியை விரட்டோ விரட்டு என்று விரட்டி விட்டனர்!

ஏதோ தமிழர்கள் தான் ஜூலியை விரட்டி விட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டனர். தமிழர்கள் ஏன் அதனைச் செய்ய வேண்டும்? தமிழர்கள் செய்யா விட்டால் வேறு யார் செய்வார். மேலே குறிப்பிட்ட அந்த மூன்று மாநிலத்தவர் தவிர வேறு யாராக இருக்க முடியும்? இதைத்தான் கூட இருந்து குழி பறிப்பது என்பதா?

இன்னும் கொஞ்சம் நாள் போனால் யார் யாரெல்லாம்  முகநூலில் படையெடுக்கப் போகிறார்களோ, பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

இவர்கள் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். ஏதோ புதிய யுக்தியைக் கையாள்கிறார்கள் என்பது தெரிகிறது! பார்ப்போம்!

No comments:

Post a Comment