ஆமாம் இப்போது இது தான் பெரிய கேள்வி!
கடந்த மூன்று மாதங்களாக தலையில் கை வைக்காததால் இப்போது அது காடு மண்டிப் போய்விட்டது!
என்ன செய்வது? வெட்டுவதற்கு ஆளில்லை. அதுவும் முடி திருத்தகம் என்னும் போது கோரோனாவிற்கு மிகவும் ஆபத்தைக் கொண்டு வரக்கூடிய ஒரு தொழில்.
கொரோனா காலத்தில் இந்த தொழில் செய்வது சரியா, தவறா என்றெல்லாம் விவாதம் செய்ய முடியாது.சோதனை செய்து பார்ப்பதெல்லாம் முடியாத காரியம். எல்லாம் ஒரே வழி தான். பட்டால் பட்டது தான்! போய்ச் சேர வேண்டியது ஒருவரா, இருவரா - தெரியாது! அந்த அளவுக்கு ஆபத்தான ஒரு தொழில் முடி திருத்தகம்.
இப்போது தான் நேரங்காலம் பொருந்தி வந்திருக்கிறது. ஓரளவு பரவாயில்லை என்னும் நிலையில் தான் முடி திருத்தகங்கள் திறக்கப் பட்டிருக்கின்றன. முதல் நாளே பெரிய கூட்டம் என்பதாக நண்பர்கள் சொல்லுகிறார்கள். அது இளைஞர்கள் சரி.
என்னைப் போன்றவர்களுக்கு இன்னும் விடிந்த பாடில்லை! கூட்டம் இல்லாத நேரம் பார்த்து நாங்கள் போக வேண்டும். ஒருவர் மட்டும் தான் கடையினுள்ளே இருக்க வேண்டுமாம்.
கூட்டம் இல்லை என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
எப்படியோ இத்தனை மாதங்களைச் சமாளித்து விட்டோம்! கொரோனா சீக்கிரம் நமக்கு "பை-பை" சொல்லும் என்று நம்புகிறோம். நம்பிக்கை வீண் போகாது.
முடிகளைத் திருத்திக் கொள்ளுங்கள்! கொரோனாவை நம் மத்தியிலிருந்து விரட்டி விடுங்கள்.
கொரோனா நீடிக்குமானால் நாம் வாழ்கிற வாழ்க்கையும் தடங்கலாகத்தான் இருக்கும்.
கொரோனாவுக்கு முடிவு கட்டுவோம்! முடி வெட்டுவோம்!
No comments:
Post a Comment