Tuesday 16 June 2020

குமட்டலும், வாந்தியும் வருகிறது...!


மலேசியர்களால் நமது தினசரி உணவுகளில் பயன்படுத்தப்படும் "தவ்வு" என்று நம்மால் செல்லாமாக அழைக்கப்படும் தோஃபு (சோயா)தொழிற்சாலை ஒன்றை கோலாலம்பூர் மாநகர் மன்றம் மூடும்படி உத்தரவிட்டிருக்கிறது.

எந்தவிதமான சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றாமல், மனிதர்கள் சாப்பிடுகின்ற உணவாயிற்றே என்கிற கவலையே இல்லாமல், அந்த தொழிற்சாலை எவ்வளவு காலமாக இயங்கி வருகிறது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை.

பொது மக்கள் கொடுத்த தகவலை வைத்துத் தான் மாநகர் மன்றம் இந்தத் தொழிற்சாலையை திடீர் சோதனயை நடத்தியிருக்கிறது. அப்படியென்றால் இது போன்று உணவு தயாரிக்கும் தொழிற்சாலைகள் எல்லாம் எந்தவித சோதனைகளுக்கு உட்படுவதில்லையோ என்கிற சந்தேகம் நமக்குக் கிளம்புகிறது!

தொழிற்சாலையைத்   சோதிக்க வந்த அதிகாரி சொல்லுகிறார்: வெறும் தரையில் தான் அந்தத் தவ்வு செய்யப்படுகிறது. கரப்பான் பூச்சிகளின் நடமாட்டம். எலிகளின் புழுக்கைகள்! வேலை செய்பவர்கள் பாதுகாப்புக் கவசங்கள், கையுறைகள் அணியவில்லை! சட்டைகள் கூட அணிந்திருக்கவில்லை!  அங்குள்ள சூழலைப் பார்த்ததும் பலமுறை வாந்தியும், குமட்டலும் வருவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை! இனி என் வாழ்நாளில் ....தவ்வா?....வ்வே! வேண்டவே வேண்டாம்!

இனி 14 நாள்களுக்குத் தொழிற்சாலை மூடப்படும்  என்று மாநகர் மன்றம் அறிவித்திருக்கிறது. 

இது தண்டனை என்று சொல்ல முடியவில்லை! உணவில் நஞ்சைக் கலப்பது!  அதற்குப் பதினான்கு நாள்களா?

No comments:

Post a Comment