Saturday 31 October 2020

கட்சி தாவும் சட்டம் தேவையான ஒன்றூ!

 கட்சி தாவுவதை தடுப்பதற்கான சட்டத்தை இயற்றுங்கள் என்பதாக வழக்கறிஞர் மன்றம் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறது!

என்ன தான் கூப்பாடு போட்டாலும் இவர்களுக்கு அது மண்டையில் ஏறுவதில்லை! யாருக்கு? சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு?

என்ன காரணம்? ஐந்து வருடங்கள் இவர்கள் கொள்ளையடிக்கும் பணத்தை,  இப்படித் தாவுவதன் மூலம்,  ஐந்தே மாதங்களில் அதை விடக் கூடுதலாக சம்பாதித்து விடலாம்!

இப்படிக் கொள்ளையடிப்பதற்கு இவர்கள் படித்த படிப்பு என்ன? அடேயப்பா! ஒருவன் வழக்கறிஞன் என்கிறான்! ஒருவன் டாக்டர் என்கிறான்! ஒருவன் கணக்காளர் என்கிறான்!  ஆனால் கொள்ளையடிப்பதற்கு எல்லாருமே குருகுலக் கல்வி கற்றிருக்கிறார்கள்!

ஏன் இந்த சட்டம் தேவை? இதற்கு நாம் எங்கெங்கோ தேடி ஓட வேண்டியதில்லை! நமது மலேசிய சரித்திரத்திலேயே இப்போதுதான் முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தைக் கொண்டு வந்து நடூவீதியில் நிறுத்தி விட்டார்கள் படித்த நமது மாண்புமிகுகள்!  அதற்குக் காரணம் கட்சித் தாவுதல்!

இப்போது ஒரு சிலர் சேர்ந்து கொல்லைப்புற வழியாக அரசாங்கத்தை அமைத்துக் கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! இப்படி ஒரு சூழலை நமது நாடு சந்தித்ததில்லை!  அதனால் இப்போது ஒரு நிலையான அரசாங்கம் இல்லை! இப்போது யார் பிரதமர் என்கிற சந்தேகம் கூட ஏற்பட்டுவிட்டது! யார் கையில் வாக்கு அதிகமாக இருக்கிறதோ அவன் தான் பின்னணியில் இருந்து கொண்டு பிரதமராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்!  அதற்குக் காரணம் கட்சித் தாவுதல்!

 ஒரு நிலையான அரசாங்கம் நமக்குத் தேவை.  இதற்கு முன்னர் பாரிசான்  கட்சி தான்  ஆட்சியிலிருந்தது.  சாமிவேலு இருந்தார்! நஜீப் இருந்தார்! ரோஸ்மா இருந்தார்! நமக்குத் தேவை இல்லாதது எல்லாமே இருந்தாலும்  ஒரு நிலையான அரசாங்கம் இருந்தது!

ஆனால் இன்று அப்படியா? தடி எடுத்தவன் எல்லாம் தண்டலாகி விட்டான்! எந்த நேரத்திலும் அரசாங்கம் கவிழும் அபாயத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது!

அதற்குத் தான் நாம் சொல்லுவது கட்சி தாவுதலைத் தடுக்கும் சட்டம் தேவை! தேவை!  இல்லாவிட்டால் நாட்டை துக்ளக் ஆட்சியாக மாற்றி விடுவார்கள் நமது மாண்புமிகுகள்!

இது அவசியம்! இது உடனடித் தேவை!

No comments:

Post a Comment