Saturday 10 September 2022

மலேசிய மக்கள் சக்தி கட்சி

 

வரப்போகும் 15-வது பொதுத் தேர்தலில் மும்முரமாக தேர்தல் களத்தில் இறங்குவோம்  என்று பத்திரிக்கைகளில் முழக்கமிட்டுக் கொண்டிருக்கும் கட்சி என்றால் அது மலேசிய மக்கள் சக்தி கட்சி! நாங்கள் இந்தியர்களுக்கான கட்சி அல்லது  திராவிடர்களுக்கான கட்சி என்றும் அவர்கள் கூறுகிறார்கள். 

இந்த கட்சிக்கும் இந்தியர்களுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்றால் 'ஒரு வேளை இருக்கலாம்!' என்று தான் சொல்லத் தோன்றுகிறது. சிறு சிறு கட்சிகள் எல்லாம் அவர்களுக்கென ஒரு சிறு கூட்டத்தை வைத்துக் கொண்டு செயல் படுவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்! அவர்கள் இந்தியக் கட்சிகள் என்றால் இருந்துவிட்டுப் போகட்டும்.

மலேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பாலும் அதன் தலைவர்  டத்தோஸ்ரீ தனேந்திரனைத் தவிர வேறு யாரும் தெரிந்தவர்களாக இல்லை. அவர் பேரியக்கமான ஹின்ராஃ லிருந்து பிரிந்து வந்தவர், தனிக்கட்சி ஆரம்பித்தவர் என்பது நமக்குத் தெரியும். 

தனேந்திரனுக்குப்பக்க பலமாக இருப்பவர்கள் அம்னோ கட்சியினர். முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், இந்நாள் தலவர்,  சாஹிட் ஹாமிடி ஆகியோரின் அரவணைப்பு மக்கள் சக்தி கட்சிக்கு உண்டு என்பது தான் அவரது பலம்.  ஒரு வேளை அம்னோவின் தொகுதிகள் ஒருசில  அவர்களுக்கு ஒதுக்கப்படலாம். அரசியலில் எதுவும் சாத்தியம்!

ஆனால் ஒருசில கசப்புகளும் அந்த கட்சியின் மீது நமக்குண்டு. முன்னாள் பிரதமர் தனேந்திரனுக்கு மிக அணுக்கமானவர்  என்பது நமக்குத் தெரியும். அவர் குற்றவாளி என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு.  ஆனால் அதனை அம்னோ ஏற்றுக்கொள்ளவில்லை. அதே போல மக்கள் சக்தி கட்சியும் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்லவில்லை.

நமக்குள்ள சந்தேகம் எல்லாம் ஒரு குற்றவாளியை நிரபராதி என்று சொல்லுகின்ற துணிச்சல் முன்னாள் அமைச்சர் சாமிவேலுவுக்கு உண்டு. இப்போது இந்தத் துணிச்சல் தனேந்திரனுக்கும் உண்டு என்னும் போது நமக்கே சஙடத்தை ஏற்படுத்துகிறது. இவர் பதவிக்கு வந்தால் என்னன்ன கொள்ளை போகுமோ என்கிற சந்தேகம் நமக்கு வருகிறது. இந்தக் கட்சியையும் ஒரு கொள்ளைக்கார கும்பல்  கட்சி என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

எப்படியோ ஒன்றை மட்டும் நாம் உறுதியாக நமபலாம். வருகின்ற தேர்தலில் பாரிசான் கட்சி ஆட்சிக்கு வந்தால் தனேந்திரனுக்கு நல்ல காலம் பிறக்கும் என்று நம்பலாம். இந்தியர்களின் ஆதரவு தேவை என்பதெல்லாம் ஒன்றுமில்லை. ஆட்சிக்கு வராவிட்டால் அவரது கட்சி இப்போது போலவே முடங்கிவிடும் என்பது உறுதி!

இப்போதைக்கு ஒளிமயமாக ஒன்றும்  தோன்றவில்லை!

No comments:

Post a Comment