Friday 2 September 2022

ஒதுக்கப்படுகிறாரா?

 

சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் வருகின்ற  பொதுத்தேர்தலில்  போட்டியிடுவாரா அல்லது ஒதுக்கப்படுவாரா எனறு பேச்சுக்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன!

நானும் ரம்பாவ் தொகுதியைச் சேர்ந்தவன் தான்.  கைரி எப்போதுமே சிரித்த முகத்துடனே வலம் வருபவர். நல்ல சுறுசுறுப்பான மனிதர். இளமைத் துள்ளும் முகம். இங்கிலாந்தில் படித்தவர். இன பாகுபாடின்றி பழகுபவர்.

எனக்கு அவர் எப்போதுமே பிடித்தமான மனிதர் தான். இந்த கோவிட்-19 காலகட்டத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர். இன்றைய நிலையிலும் சிறப்பாகவே பணியாற்றிக் கொண்டிருப்பவர்.  அவர் எப்போது சுகாதார அமைச்சராக தனது பணியை ஆரம்பித்தாரோ அப்போதிருந்தே  அவரது பணியைச் சிறப்பாகவே செய்து வந்திருக்கிறார்.

அம்னோ அவரை ஒதுக்குகிறதா அல்லது இதே தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும், அம்னோ  துணைத்தலைவருமான முகமட் ஹசான் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கைரியை ஒதுக்கிவிட்டு ஹசான்  நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட விரும்புகிறா  என்பது புரியவில்லை.

முகமட் ஹசானும் போட்டியிட்ட ரந்தாவ் தொகுதியில் செல்வாக்குப் பெற்றவர் தான். எல்லா இனத்தவரின் ஆதரவு அவருக்கும் உள்ளது. இருவருமே நல்ல சேவையாளர்கள் என்பதில் ஐயமில்லை. ஹசான் இத்தனை ஆண்டுகள் போட்டியிட்ட தொகுதிலேயே  போட்டியிட  வேண்டுமென்று விரும்புகிறார். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அவர் போட்டியிட பல தொகுதிகள் உள்ளன. அவர் மாநில முதலைமைச்சராக  இருந்தவர். அவர் மாநில அளவில் செல்வாக்கு உடையவர். எங்கும் போட்டியிடலாம்.

ஆனால் கைரியின் நிலை வேறு. அவர் ஒரு தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டவர்.  தனது தொகுதியில் செல்வாக்கை வளர்த்துக் கொண்டவர். அதனால் அவர் தொடர்ந்து தனது தொகுதியில் போட்டியிடுவதைத் தான் அவர் விரும்புவார்.

ஆனால் இப்போது நடப்பது என்ன என்று புரியவில்லை. கைரியை அம்னோ கைவிடுகிறதா அல்லது ஹசான்,  கைரியை கைவிடுமாறு  அம்னோவை நெருக்குகிறாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கைரி நல்ல சேவையாளர். அவர் தொடர்ந்து அம்னோவில் இருப்பது கட்சிக்கு நல்லது.  ஊழலையே மூலதனமாகக் கொண்ட ஒரு கட்சி அம்னோ.  கைரி போன்றவர்களின் பெயர் ஊழலில் இதுவரை சம்பந்தப்படவில்லை. 

மற்றவர்களிடம் இல்லாத சிறப்பு கைரியிடம் உள்ளது. அவர் எப்போதும் ஒரு படித்த மனிதராகவே நடந்து கொள்கிறார்.

அதுவே அவரது சிறப்பு!

No comments:

Post a Comment