Thursday 22 September 2022

எத்தனை இடங்களில் போட்டியிடும்?

 

வருகின்ற 15-வது பொதுத்  தேர்தலில் ம.இ.கா. 12 நாடாளுமன்ற தொகுதிகளில்  போட்டியிடும் என்பதை ம/இ.கா. தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்  மறுத்திருக்கிறார்.

"எண்ணிக்கை அல்ல நாங்கள் கேட்பது.  வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்.  குறிப்பாக கேமரன் மலை போன்ற பாரம்பரிய தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்" என்பது தான் எங்களது கோரிக்கை.

நிறைய தொகுதிகளைக் கொடுத்துவிட்டு பின்னர் வெற்றி கிடைக்கவில்லை என்றால் அதுவும் கட்சியின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதை ம.இ.கா.வின் தலைவர் நன்றாகவே  உணர்ந்திருக்கிறார்.

அவர் கோரிக்கை ஏற்புடையது தான். எண்ணிக்கையைவிட வெற்றிதான் முக்கியம். அடுத்த ஆட்சி யாருடையது என்பதை இப்போது சொல்ல இயலாது. எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் இப்போதைய ஆளுங்கட்சியினரைபற்றி அப்போது அது பற்றி யாரும் 'நீ! நான்!' என்று யாரையும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள்! தோல்வி தோல்வி தான். ஏற்றுக் கொள்வார்கள்!

ஆனால் இன்றைய நிலையோ வேறு. தேசிய முன்னணி வெற்றி பெறும் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அதிலும் அம்னோ கட்சியினருக்குப் பலத்த அடி விழுந்து கொண்டே இருக்கிறது.  ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபடுவது  அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இல்லை.  அதனால் தான் அவர்களது கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று அவர்கள் துடிக்கிறார்கள்! ஆட்சிக்கு வந்தால்  அவர்கள் அனைவரும் புனிதர் ஆகிவிடுவார்கள்! இன்னும் அது அவர்களுக்கு நடக்கவில்லை!

ம.இ.கா. வுக்கும் அதே நிலை தான்!  எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் இவர்களுடைய திருகுதாளங்கள் அனைத்தும் வெளிக்கொணரப்படும் என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்!

தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வழக்கம் போலவே இவர்கள் செயல்படுவார்கள்!  அதில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை!!  திருட்டுக்கைகளைக் கட்டிவைக்க முடியாது!

இப்போது  ம.இ.கா. தலைவரின் அணுகுமுறை   சரியானதுதான். அதிக எண்ணிக்கை என்பது ஆபத்திலும் முடியலாம். சிலவாக இருந்தாலும் வெற்றி பெற்றால் நிறைவாக இருக்கும். மிகவும் எச்சரிக்கையாகவே நடந்து கொள்கிறார். அவரைக் குறை சொல்லவும் முடியாது.

ஏற்கனவே ம.இ.கா.,  கடந்து வந்த பாதை, திரும்பிப்பார்க்கும் போது, திருப்திகரமாக அமையவில்லை.  நாசக்காரக்கும்பல் என்று தான் பெயர் எடுத்தார்களே தவிர  நல்லவர்கள் என்று பெயர் எடுக்கவில்லை!  அந்தப் பழி இன்னும் நீண்டநாள் நீடிக்கும்! இப்போதைக்கு அது மறையப் போவதில்லை!

தேர்தல் வரும் போது தான் மக்களின் மனநிலை என்ன என்பது புரியும். அதுவரை எல்லாரும் எதையாவது சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியது தான்!

No comments:

Post a Comment