Wednesday 7 September 2022

எலிசபத் மகாராணியார்


 எந்த நாட்டில் எந்த அரசிகள் வந்தாலும் உலகமே போற்றும் ஒரே அரசி என்றால் அது இங்கிலாந்தின் ராணி எலிசபத் மட்டும் தான். அவரோடு ஒப்பிட யாரும் இல்லை. ஒப்பாரும் இல்லை மிக்காரும் இல்லை. அரசி என்றால் அது ராணி எலிசபத். அவர் ஒரே ஒருவர் தான் அரசி. 

இப்படித்தான் நாம் பழகியிருக்கிறோம். கிண்டலடிப்பதற்கும் எலிசபத் மகாராணி தான். பெருமைப் ப்டுத்துவதற்கும் எலிசபத் மகாராணி தான்.

மற்றவரைப் பார்த்து நாம் கேட்கும் கேள்வி: "என்ன பெரிய எலிசபத்  மகாராணி என்று நினைப்போ!".  அது ஒன்று. இன்னொன்று: சான்றுக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,  எலிசபத் அரசியைவிட இன்னும் ஒரு பங்கு கூடுதலாகவே வாழ வேண்டும் என்று  வாழ்ந்து காட்டியவர்  என்று பெருமையாக  சொல்லுவதுண்டு. நமது முன்னாள் பிரதமரின் ரோஸ்மா மன்சூரும் இந்த ரகம் தான். ஆனால் ராணியின் வெற்றியை இவர்களால் அடைய முடியவில்லை.

என்னுடைய ஞாபகத்திற்கு வருவதெல்லாம் எலிசபத் அரசியார் முடிசூட்டபட்ட நாள் தான். அவர் முடி சூட்டியது 1952-ம் ஆண்டு. எனது ஞாபகத்தில் உள்ளதெல்லாம்  அவர் முடி சூட்டிய அன்று எங்களது பள்ளிக்கு வெளியே உள்ள முக்கிய வீதியில் கூர்க்கா படையினரின் அணிவகுப்பு நடந்தது. மாணவர்கள் அனவரும் வீதி ஒரங்களில் நின்று கொண்டு இங்கிலாந்து கொடிகளை வைத்துக் கொண்டு கையசைத்து எங்களது மகழ்ச்சியை வெளிபடுத்தினோம். அன்றைய முக்கிய பிரமுகராக யார் கலந்து கொண்டது என்பது ஞாபகத்தில் இல்லை. இந்த நிகழ்ச்சி கூட மேலோட்டமாகத் தான் ஞாபகத்திற்குக் கொண்டுவர முடிந்தது.

எழுபது ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த ஒரே அரசியார் என்றால் அவர் எலிசபத் அரசியார் தான். எலிசபத் அரசியார் வாரிசாக யார் வந்தாலும் அவர்களால் அரசியாரின் பெயரை எடுக்க முடியாது. எழுபது ஆண்டுகள் என்பது சாதாரண விஷயம் அல்ல. இனி யாராலும்,அது இங்கிலாந்தாகவே இருக்கட்டும், வேறு ஒருவர் எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியும்  என்கிற நிலை வரும் என்று எதிர்பார்க்க முடியாது.

எலிசபத் மகாராணியோடு ஒரு நீண்ட பாரம்பரியம் முடிவுக்கு வந்தது. இனி அது தொடர வாய்ப்பில்லை!

No comments:

Post a Comment