8.3.1936 - 15.9.2022
நீண்ட காலம் மலேசிய அமைச்சரவையில் இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்து வந்தவரான துன் சாமிவேலு அவர்கள் மறைந்த செய்தியைக் கேட்டபோது மனம் தடுமாறவே செய்தது.
ஆனால் இறப்பு என்பதிலிருந்து யாரும் தப்ப முடியாது. அவரைப் பற்றியான பல்வேறு அபிப்பிராயங்கள் நமக்கு உண்டு. இந்திய சமூகத்தினரிடமிருந்து நிறைய சொல்லடி வாங்கிய ஒரே இந்தியத் தலைவர் என்றால் அது இவராகத்தான் இருக்க முடியும்.
நடந்தது நடந்தது தான். அதை மாற்ற முடியாது. அதைப்பற்றி பேசுவதாலும் எதுவும் மாறிவிடப் போவதில்லை. அவரது காலத்தில் என்ன நடந்திருந்தாலும் "எல்லாம் நன்மைக்கே!" என்று எடுத்துக் கொள்வது தான் சரி.
அவர் செய்த நல்லவைகளை மட்டும் நினைத்துப் பார்த்து நாம் நன்றியுடையவர்களாக இருப்போம். நல்லதே நடக்கட்டும்.
அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
No comments:
Post a Comment