Saturday 14 October 2023

செலுவுகளைக் குறையுங்கள்!

 

இப்போதுள்ள நாட்டின் நிலைமையை நாம் அனைவரும் அறிவோம்.  நாட்டின் நிலை சரியில்லை என்றால் வீட்டின் நிலைமையும் தறிகெட்டுப் போகத்தான் செய்யும்.  அது தான் நியதி.

சிக்கனம் என்பது எத்துணை முக்கியம் என்பதை இன்றைய நிலையில்  நாம் உணர முடியும். நாங்கள் வாங்கும் 10 கிலோ  புழுங்கல் அரிசி  முன்பு 36 வெள்ளி இன்றை விலை 50.00 வெள்ளி! இப்போது கோழி முட்டைகளின் விலை 80 காசு அளவுக்குப் போய்விட்டது. முன்பு  30 காசு.

இதிலிருந்தே ஓரளவு நாட்டின் நிலைமையும் மக்களின் நிலைமையும்  நாம் புரிந்து கொள்ளலாம். 

அதனால் நாம் செய்ய வேண்டியது என்ன?  செலவாளிகள் என்றால் நமது நிலைமை மிகவும் மோசம் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். கொஞ்சம்  'ஒவர்' ஆகவே நாம் காட்டிக்கொள்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆடம்பரத்திற்கு நாம் முதலிடம் கொடுப்பது இப்போது மட்டும் அல்ல அப்போதும் தான். கல்யாணம் என்றால் அனாவசிய செலவு  செய்வது  நாம் தான்.  செலவுகளை எப்படிக் குறைப்பது என்பதுபற்றி நாம் யோசிப்பதே இல்லை. சமீபத்தில் நடந்து ஒரு திருமணம். காலை பத்து மணி.  அதுவும் வேலை நாள். அந்த நேரமே பகல் உணவு.  பிரச்சனை முடிந்தது. அதிக செலவு இல்லை. யாரும் குறை சொல்ல ஒன்றுமில்லை!

பிறந்த நாள் விழாக்களைக் கொண்டாடுகிறோம். பெரிய ஆடம்பரம் தேவை இல்லை. வெளி ஆட்கள் கூட தேவை இல்லை.  அது ஒரு குடும்ப விசேஷம். மிக நெருக்கம் உள்ளவர்களே போதும்.  குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி. பெரியவர்களுக்கும் மகிழ்ச்சி.  வேறு என்ன வேண்டும்?  அது ஒரு குடும்ப நிகழ்ச்சியாக நடத்தினால் அது ஒரு செலவும் இல்லாத நிகழ்வு. 

இப்போது தேவை இல்லாத ஒன்றையும் புதிதாக நமது குடும்ப நிகழ்வாக நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்தக் காலங்களில் நமது தமிழகக் கிராமங்களில்  குழந்தைகள் பூப்பெய்துவதை  கொண்டாடுவதில் வெவ்வேறு காரணங்கள் உண்டு.  நம் நாட்டில் அது தேவே இல்லாத ஒன்று.  ஆனால் சமீபகாலமாக அதனையும் வலிந்து ஒரு சிலர் கொண்டாடுகின்றனர். தேவை இல்லாத ஒன்று, தேவை இல்லாத ஆடம்பர செலவுகளில்  சேர்ந்து கொண்டது!

இதே போல நமது செலவுகளைக் குறைக்க இன்னும் நமது அன்றாடச் செலவுகளையும் கவனிக்க வேண்டும். விருந்துகளுக்குப் போனால் குழந்தைகளுக்கு ஒரு பெரியவர் சாப்பிடும் சாப்பாட்டை  அப்படியே தட்டில் போட்டு அந்தச் சாப்பாட்டை அப்படியே தூக்கி எறியும் தாய்மார்களைப் பார்த்திருக்கிறோம். குழந்தைகளின் சாப்பாட்டு அளவு இன்றைய தாய்மார்களுக்குத் தெரிவதில்லை! வீட்டில் எப்படி? மூன்று பேர் உள்ள குடும்பத்திற்கு முப்பது பேருக்குச் சமைக்கும் தாய்மார்கள் உண்டு! அளவு தெரியவில்லை! தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமுமில்லை!

பொதுவாக, நம்மிடையே அனாவசிய செலவுகளைக் குறைக்கலாம். நிறைய வழிகள் உண்டு.,  கொஞ்சம் சிந்தித்தால் போதும். வழிகள் தெரியும்.

No comments:

Post a Comment