Monday 2 October 2023

 
கல்வி  ஒன்றே  நமக்கு  ஆயுதம்.  ஏழ்மையிலிருந்து விடுதலைப் பெற வேண்டுமானால்  கல்வியைத் தவிர  வேறு எளிமையான ஆயுதம்  எதுவும் இல்லை.

நம்மைச் சுற்றிப் பாருங்கள். தோட்டப்புறங்களில் ஏழ்மை நிலையில் வாழ்ந்த எத்தனையோ குடும்பங்களின்   அடுத்த தலைமுறையினர் ஏழ்மை நிலையை மாற்றி படித்தவர் பட்டியலில் வந்து விட்டனர்.

ஆனால் அவர்கள் அனைவரும், அவர்களின் பெற்றோர்களின் அசராத உழைப்பினால் அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களது பிள்ளைகளைச் சான்றோராக வளர்த்து விட்டனர்.

ஆரம்ப காலகட்டத்தில் நிறைய தமிழாசிரியர்கள் உருவானார்கள். ஆமாம் அவர்கள் அனைவரும் தோட்டத் தமிழ்ப்பள்ளிகளில் படித்தவர்கள். அதுவும் பெரும்பாலானோர் மலையாளிகளாகவே இருந்தனர். அதற்குக் காரணம் அவர்கள் இங்கு வருவதற்கு முன்னரே கல்வியைப்பற்றி - அதனால் வரும் முன்னேற்றத்தைப் பற்றி - அறிந்தவர்களாகவே இருந்தனர்.

தமிழர்களில் ஒரு சாராருக்குக் கல்வியின் முக்கியத்துவம் அறியவே இல்லை. அவர்கள் தான்  நல்ல குடிகாரர்களாக  இருந்தனர்.இரண்டு மூன்று தலமுறையினருக்குப் பின்னர் தான் கல்வியை அறிந்தவர்களாக  மாறினார்கள். இப்போது யாரையும் குறை சொல்வதறகில்லை.  அனைவரும் கலவி ஏன் தேவை என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது  பிரச்சனை வேறுவித  மாற்றத்திற்கு உள்ளாகிவிட்டது.  அன்று பெற்றோர் கல்வியின் முக்கியத்துவத்தை  புரிந்து கொள்ளவில்லை. இன்றைய பெற்றோர்க்குப்  பொருளாதார பலமில்லை.  ஆனாலும் இயக்கங்கள், அரசாங்கம், தொழிலதிபர்கள் என்று பலவேறு வகைகளில் கல்வி கற்பதற்கான  வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.

இன்றைய போட்டி நிறைந்த உலகில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. ஓர் ஏழை கல்வி கற்பதன் மூலம் அவனது குடும்பத்தின்  வாழ்க்கை முறை  முற்றிலுமாக மாற்றியமைக்கப்படுகிறது. ஒரு பணக்காரன் தனது பணத்தைத் தற்காத்துக் கொள்ள கல்வி தேவைப்படுகிறது. அதனால் எப்படிச் சுற்றிப்பார்த்தாலும் கல்வி தேவையே 

அதனால் தான் அவ்வைப்பாட்டி , பிச்சை ஏடுத்தாவது  கல்வியைக் கொடு என்று பெற்றோரைப் பார்த்துச் சொன்னார். நமது ராஜ ராஜ சோழன் தனது காலத்தில் இந்தியா பூராவும்  நிறைய கலவெட்டுகளில்  மக்களின் வாழ்வியலை  தமிழில் எழுதிவிட்டுப் போயிருக்கிறார். இந்தியாவின் சரித்திரத்தை அறிய அவருடைய கல்வெட்டுகளைப் படித்தாலே போதும். அவர் கற்றவர், வல்லவர் என்பதால்தான் அவரது பெயர் இன்னும் நிலைத்து நிற்கிறது.

நாமும் அவரது பரம்பரை தானே! நமக்கு மட்டும் கல்வி ஏறாதா?


                                                                    -  2  -

No comments:

Post a Comment