Tuesday 9 November 2021

ஒரே காரின் மீது மழை!

                                                                   

                                                                Rain falling on a single car!

இது மாயமா மந்திரமா என்பது நமக்குத் தெரியாது! ஆனால் இப்படி ஒரு செய்தி வைரலாகிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை!

இப்போதெல்லாம் எந்த செய்தியாக இருந்தாலும் அதன் நம்பகத்தன்மை கேலிக்குறியாதாகி விட்டது  என்பது நமக்குத் தெரியும். கொஞ்சம் கற்பனைத் திறன் உள்ளவர்கள் இப்படியெல்லாம் செய்திகளை உண்மைச் செய்திகள் போல கொண்டு வந்துவிடுவார்கள்!    

  சந்தேகங்களை எல்லாம் விட்டுவிட்டு இந்த செய்தியை மட்டும் பார்ப்போம்.  இந்த நிகழ்வு நடந்ததாக சொல்லப்படும் இடம் Cikarang, West Java, Indonesia  சுமார் பகல் 12.00 மணி அளவில் அங்குள்ள ஒரு ஹொட்டலுக்கு எதிரேயுள்ள கார்கள் நிறுத்துமிடத்தில் நடந்திருக்கிறது. எதேச்சையாக அங்கு போன Uryanriana என்னும் நபர்  தொடர்ந்து ஒரே ஒரு "தோயோத்தா எம்.பி.வி." கார்  மீது மழை பெய்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிசயத்துப் போய்  அதனைப் படம் எடுத்து வைராலக்கி விட்டார்!

இப்போது அவர்கள் நமது குடுகுடுப்பைக்காரர்கள் போல் "நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!" என்று குடுகுடுப்பயைக் கொஞ்சம் பலமாக ஆட்ட ஆரம்பித்துவிட்டார்கள்! எல்லாம் கடவுள் செயல் என்றும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்!

நமக்கு ஒன்றும் அதில் ஆட்சேபணையில்லை. இந்தோனேசியாவில் நல்லது நடந்தால் நமக்கும் நல்லது தானே! நமது அண்டை நாடு பலமாக இருக்க வேண்டும். வளமாக இருக்க வேண்டும். இந்தோனேசியர்கள் நல்ல உழைப்பாளிகள். அவர்கள் மீது நமக்கு நல்ல மரியாதையுண்டு.

ஆனாலும் இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு மையம் இதற்கெல்லாம் சாத்தியமே இல்லை என்கிறது! குறிப்பிட்ட சில இடங்களில் மழை பெய்யலாம். ஆனால் ஒரே ஒரு கார் மீது மழை என்பதை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்பது தான்  அவர்களின் முடிவு.

எப்படியிருப்பினும் அந்த காணொளியின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் வரை நாமும் நமது நம்பிக்கையைத் தள்ளி வைப்போம்!                                                                                                                                        

No comments:

Post a Comment