Thursday 18 November 2021

திரைக்கடல் ஓடியும்.........!

                            Malaysians are underpaid by 66% compared with advanced countries.

மலேசியாவின் இளம் தலைமுறையினர் வெளிநாடு  சென்று வேலை செய்வதையே விரும்புகின்றனர் என்று ஆய்வுகள் காட்டுகின்றன!

அதற்கு ஒரே காரணம் நமது கல்வி தரத்தை நாமே குறைத்து மதிப்பிடுகிறோமோ என்பது தான்! வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு.  ஆனால் இதே கல்வி தரத்தை வெளி நாடுகளில் ஏற்றுக்கொள்கின்றனர்.

அதுவும் இந்திய இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் முற்றிலுமாக மறுக்கப்படுகின்றது என்பதைக் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். அதுவும் பட்டதாரி இளைஞர்களுக்கு வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன. தனியார் துறைகளும் நமது கைகளில் இல்லாததால் அங்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்தாலும் சம்பளத்தில் கை வைக்கின்றனர்!  அதுவே நமது இளைஞர்களுக்கு இங்கு வேலை செய்வதில் வெறுப்பை ஏற்படுத்துகின்றன.

இந்திய இளைஞர்களுக்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்புக்கள், நல்ல சம்பளத்துடன், கிடைப்பதால் பெரும்பாலும் அங்கு வேலை செய்வதையே விரும்புகின்றனர். சிங்கப்பூரில் சம்பளம் அதிகம். அதுமட்டும் அல்ல. நாம் சிங்கப்பூரை வேறு ஒரு நாடு என்று என்றுமே நினைத்ததில்லை! அது மலேசியாவின் ஒரு பகுதியாகவே நாம் நினைக்கிறோம்! அதனால் நமக்குச் சிங்கப்பூர் தான், வேலை என்று வரும்போது, முதலிடமாக நமது நினைவுக்கு வருகிறது.

நாம் எங்கெல்லாம் வேலை தேடிப் போகிறோம் என்பதை ஆய்வுகள் என்ன சொல்கின்றது என்று பார்ப்போம்:

சிங்கப்பூர்: 59%  ஆஸ்திரேலியா: 48%  நியுசிலாந்து: 50%  பிரிட்டன் 55%

பிரிட்டனுக்குப்  போகிறவர்கள் பெரும்பாலும் தங்களது கல்வித் தகுதியை உயர்த்திக் கொண்டு பின்னர் அங்கேயே தங்கி விடுகின்றனர். ஆஸ்திரேலியா போகிறவர்களும் அதே கதை தான். அங்கேயே தங்கிவிட விரும்புகின்றனர். ஏறக்குறைய நியுசிலாந்தும் அதே கதை தான்.

மற்றைய நாடுகளிலும் பலர் வேலை செய்யத்தான் செய்கின்றனர். அவர்கள் நிச்சயம் நாடு திரும்பவே விரும்புகின்றனர். குறிப்பாக அரபு நாடுகளில் வேலை செய்பவர்கள், ஆப்பிரிக்க நாடுகளில் வேலை செய்பவர்கள் அங்குத் தங்க விரும்பமாட்டார்கள்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் நைரோபியில்  (ஆப்பிரிக்கா) வேலை செய்து விட்டு திரும்பவும் வியட்னாமுக்குப் போய்விட்டார். ஆனாலும் இங்கு தான் அவர் வீடு உள்ளது. அவருடைய சம்பளம் என்பது அமெரிக்க டாலரில் தான் கொடுக்கப்படுகிறது. 

இங்கு வேலை மறுக்கப்படும் என்றால் வெளி நாடுகளுக்குப் போவதைத் தவிர  வேறு வழியில்லை! வெளி நாடுகளில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு இங்குச் சொந்தத் தொழிலில் ஈடுபடுவது இன்னும் சிறந்தது.

நமக்கு இளம் தலைமுறையினர் மீது  நம்பிக்கை உள்ளது. அவர்களுக்குத் திறமைகள் உண்டு. துணிவாக காரியங்களைச் செய்யும் மனப்பக்குவம் உண்டு.

நமது இன இலைஞர்கள் வருங்காலத்தில் சாதனைகள் புரிவார்கள் என நம்பலாம்!

No comments:

Post a Comment