Friday, 19 November 2021

என்ன முன்னேற்றத்தைக் கண்டோம்?

 


"மலேசியன் இந்தியர் காங்கிரஸ்"  என்னும் பேரியக்கத்தை நான் குறை சொல்ல மாட்டேன். அந்த கட்சி பல பெரியவர்களால் இந்தியர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட ஒரு கட்சி. ஆனால் இடையே சுயநலமிகளால் வழிநடத்தப்பட்டு இந்தியர்களை வீழ்த்த நடந்த சதியில் அக்கட்சி பாதை மாறிப்போனது!

இந்தியர்களின் மேம்பாட்டுக்காக ஆண்டுக்குப்  பத்து கோடி வெள்ளி அதனையும் அடித்து  வாய்க்குள் போட்டுக் கொள்கிறார்கள்!  மனம் கனக்கிறது.  யாரை நொந்துகொள்வது? கொள்ளையடிக்கிற இடத்தில் இருப்பவன் அவன் தானே!

இந்தியர்களின் முன்னேற்றம் என்றாலே ஏதோ இவர்களின் முன்னேற்றம் மட்டும் தான் என்கிற எண்ணம் இவர்களிடையே வளர்ந்துவிட்டது. படிக்காத அறிவு கெட்டவனைக் கூட வெளிநாடுகளுக்கு அனுப்பி படித்தவனாகக் காட்டிக் கொள்வதில் இவர்களுக்கு அபரிதமான ஆசை.

இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பதை நம்மால் ஊகிக்க முடியவில்லை.  இவர்களின் டி.என்.ஏ. கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டதோ!

ஒரு விஷயத்தில் நான் மலேசிய சீனர் சங்கத்தைப் பாராட்டுகிறேன். தேர்தல் களத்தில் குதிப்பவர்கள்  என்றால் அவர்கள் பெரும்பாலும் பணம் உள்ளவர்களாகவே வருகிறார்கள். அவ்ர்களுடைய சமூகத்தைச் சார்ந்த பிரச்சனைகளில் அவர்கள் உண்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.  சமூகம் எந்த வகையிலும் பாதிப்பதில்லை. 

அதைத்தான் நாமும் விரும்புகிறோம். ஆனால் அது மட்டும் நடப்பதில்லை! ஓரே காரணம் தான். இங்குப் பஞ்சப்பராரிகளை வைத்துக் கொண்டு  நாம் அரசியல் நடத்துகிறோம்!  இவர்கள் நோக்கமெல்லாம் பட்டம், பதவி, பணம்! பட்டம், பதவி கூட பரவாயில்லை. மன்னித்துவிடலாம்.  ஆனால் சமுதாயத்திற்குக் கிடைக்க வேண்டிய  பொருளாதார உதவிகளையும் சுரண்டி விடுகிறார்கள்! இதனைத் தான்  நம்மால்  பொறுத்துக் முடியவில்லை.

எலியை உணவாகக் கொள்ளும் இருளர் சமூகத்திடம் உள்ள தன்மான உணர்வு கூட இல்லாத "கொள்ளயர்" சமூகமாக இவர்கள் உருவாகிவிட்டனரே என்று நினைக்கும் போது  ஏற்படப்போகும் சாபங்களை இவர்கள் நினைத்தே பார்ப்பதில்லையா? ஐயோ பாவம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது!

உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்றால் உங்களுக்கு ஐயோ கேடு! வரப்போகிற கேடுகளுக்குத் தயாராக இருங்கள்!  கேடுகளிலிருந்து உங்களால் தப்பிக்க முடியாது. மக்கள் கொடுக்கும்  சாபத்திலிருந்து உங்களால் எங்கும் ஓடிவிட முடியாது!

இந்திய சமுதாயத்தை எப்படி விழவைத்தீர்களோ  அதே போல நீங்களும் வீழ்வீர்கள்!

No comments:

Post a Comment