Idris Haron Nor Azman Hassan
பக்காத்தான் ஹராப்பான் (அன்வார் இப்ராகிம்) செய்தது சரியான முடிவா என்கிற விவாதம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அது பற்றி பேசுவதும் புண்ணியமில்லை. அவர்கள் கட்சியில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இப்போது அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தொகுதிகளும் வழங்கப்பட்டுவிட்டன.
கட்சியின் இந்த முடிவை பக்காத்தான் கட்சியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பைத் தெரிவித்த போதிலும் அன்வார் அந்த எதிர்ப்புக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் நமக்கு எதிரிகள் அல்ல நமது நண்பர்கள் என்பதாக அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி அவர்களை ஏற்றுக் கொண்டார்!
"ஓடுகாலிகளுக்கு ஓடுபாதையா?" என்று சொல்லி அவர்களை ஒதுக்க வேண்டிய அவசியம் நமக்கும் இல்லை. அன்வார்க்கு ஏதோ ஒன்று அவர்கள் நல்லவர்கள் என்று சொல்லுகிறது. பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல ஓர் அரசியல்வாதியை இன்னொரு அரசியல்வாதி தான் அறிவான் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தலைவன் வழி நம் வழி. அவ்வளவு தான்! தலைவன் இட்ட பாதையை ஏற்றுக் கொள்வோம். இது தனிப்பட்ட அன்வாரின் கருத்தாக இருந்தாலும் அவர் முறைப்படி அதனை பக்காத்தான் கூட்டணியரோடு பேசி முடிவெடுத்திருக்கிறார். அதனால் நாம் அலட்டிக்கொள்ள ஒன்றுமில்லை!
அன்வாரின் கருத்து சரியா தவறா என்பது தேர்தல் முடிவுகள் தான் காட்ட வேண்டும். அதுவரை பொறுமை காப்போம்.
இந்த இருவரும் வெற்றி பெற்றால் - வெற்றி பெற்ற பின்னர் தான் அவர்களின் உண்மை சொரூபம் நமக்குத் தெரிய வரும். அவர்கள் பரம்பரைத் திருடர்களா அல்லது அரசியல் திருடர்களா என்பது நமக்குத் தெரியும்.
அதுவரை நாம் பொறுமை காப்போம். அவர்களை நாம் நம்புவோம். அவர்கள் நல்லவர்கள் என்பதாகவே நாம் நம்புவோம். அன்வார் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என நம்புவோம்.
அன்வார் அல்லது பக்காத்தான் எடுத்த முடிவு சரியான முடிவு தான்! இனி மக்களின் முடிவை நாம் தெரிந்து கொள்வோம்!
No comments:
Post a Comment